வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் அழைப்பு
வாடிகன்: வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போப் 14வது லியோ அழைப்பு விடுத்துள்ளார்.
வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருக்கிறது. வெனிசுலாவில் தற்போது இடைக்கால அதிபர் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்க படைகள் கையாண்டுள்ள நடவடிக்கை சர்வதேச நாடுகள் தரப்பில் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளன. இந் நிலையில், வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போப் 14வது லியோ அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது;
அனைத்து தரப்பினர் இடையே உரையாடல்களை ஊக்குவித்து ஒருமித்த கருத்தை தேடும் ஒரு ராஜதந்திரம், பலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு ராஜதந்திரத்தால் மாற்றப்படுகிறது.
போர் நாகரீகம் ஆகிவிட்டது. இங்கே போருக்கான ஆர்வம் பரவி வருகிறது. உலக நாடுகள் எதிர்காலத்தில் வெனிசுலா மக்களின் விருப்பங்களை மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு போப் 14வது லியோ கூறினார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்
இல்ல சுப்பு சார், நம்ப ப்ரமிஷ்ராஜ், பளிச்ராஜ், வின்மாறன், ப்ளாகஃருட் இவங்கயெல்லாம் இப்போ மௌனவிரதம் ...
சிரிப்பு வருதுங்க அய்யா.. நீங்க ஒரே ஒருவரிடம் சொன்னாலே போதுங்க அய்யா. உலகமே மனித உரிமைகளை தானே காத்துக்கும். நம்ப சாமீ கும்பிடற பயபுள்ளதாங்யா அது... உன்னிப்பா பாருங்க உங்க கண்ணுக்கும் தெரியும் சாமீ
வெனிசுலா பெரும்பான்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடு அதனால்தான் போப்புக்கு அந்த மக்கள் மீது பாசம் வந்து மனித உரிமையை காப்பதற்கு உலக நாடுகளை அழைக்கிறார். இதே போல் மற்ற நாடுகளிலும் நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் அங்கு மீறப்படும் மனித உரிமைகளைப் பற்றி எல்லாம் போப்புக்கு கவலையில்லை அதைப் பற்றி எதுவும் பேசவும் மாட்டார் இதிலிருந்து என்ன தெரிகிறது அவரவர் மதம்தான் அவர்களுக்கு பெரியது. ஆனால் பெரும்பான்மை இந்துக்கள் வசிக்கும் இந்தியாவில் மட்டும்
எம்மதமும் சம்மதம்! எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்திற்கு குரல் கொடுப்போம் ஆனால் பக்கத்தில் இருக்கும் வங்கதேச இந்துக்களுக்கு நடக்கும் கொடுமையை கண்டுக்காமல் கள்ள மவுனம் காத்து கடந்து போய் விடுவோம் சூப்பர்ல!மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு