தேர்தல் வருவதால் ஓய்வூதிய திட்டம்; திமுகவின் ஏமாற்று வேலை என்கிறார் நயினார்
திருச்சி: முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்ட அறிவிப்பு ஏமாற்று வேலை. தேர்தல் வருவதால் அறிவிப்பு வெளியிடு கிறார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்ட அறிவிப்பு ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்பொழுது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். திமுக அரசின் ஆயுட்காலம் முடிவடைய கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்?
நர்சுகள், துப்புரவு பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது? ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர் ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் மாற்றத்தை உருவாக்கி விட்டு தான் செல்வார். அமித்ஷா வந்து சென்ற பிறகுதான் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியும். காங்கிரஸ் கட்சியில் நடப்பது உட்கட்சி பூசல் காங்கிரஸ் வேறு எங்கேயோ கூட்டணிக்கு செல்வதாக சொல்கிறார்கள். ஒரு கூட்டணி பற்றி நாம் ஏதும் உறுதியாக உடனடியாக ஏதும் சொல்ல முடியாது.
யார் முதல்வராக வருகிறார் என்பதை விட யார் முதல்வராக தொடரக்கூடாது என்பது தான் எங்களுக்கு முக்கியம். தற்போது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நிச்சயமாக அப்புறப்படுத்த வேண்டும். நாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
Venugopal S - ,
04 ஜன,2026 - 15:43 Report Abuse
வேண்டாத மருமகள் உட்கார்ந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் என்ற கதை தான்! 0
0
Reply
அப்பாவி - ,
04 ஜன,2026 - 09:47 Report Abuse
குடுத்தாலும் குத்தம். குடுக்காட்டாலும் குத்தம். 0
0
Reply
Balakumar V - ,இந்தியா
03 ஜன,2026 - 23:11 Report Abuse
2 சதவீதம் கூட இல்லாத அரசு ஊழியர்களுக்கு வேண்டாத சலுகைகளை வழங்கி பொதுமக்கள் அதிருப்தியை பெற்று விட்டார்கள். 0
0
Reply
Mariadoss E - Trichy,இந்தியா
03 ஜன,2026 - 21:53 Report Abuse
என்ன செய்யிறது என்று தெரியாமல் நீங்க உளர்ரத பார்த்து. போராட்டத்தை கண்டுக்காம இருக்காங்க என்று ஒரே புலம்பல், ஏதாவது செஞ்சா கண்துடைப்பு. என்னடா சொல்ல வரீங்க 0
0
Reply
Chandru - ,இந்தியா
03 ஜன,2026 - 21:13 Report Abuse
Nainar Ji. You dont have the guts to raise that tirutani issue. Had dmk been the opposition now they would have made a mountain out of it. ADMK and you are missing wonderful chances . 0
0
Reply
surya krishna - ,
03 ஜன,2026 - 21:11 Report Abuse
மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் வழங்கப்படும்.
CPS ஊழியர்,
பணி ஓய்வு பெறும் போது.. நாம் செலுத்திய 10% அரசு செலுத்திய 10% இதற்கு வட்டி 8% எல்லாம் சேர்த்து, சுமாரா ரூபாய் ஒரு கோடி கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனி இல்லை.
தமிழ்நாடு அரசு சிறப்பு பென்ஷன் திட்டத்தின் படி,
60 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் 61ம் வயதில் இறந்தால் அந்த ஓராண்டில் சுமாராக 6 லட்சம் (மாதம் 1 லட்சம் என வைத்துக் கொண்டால்) பென்ஷன் வாங்கி இருப்பார்.
பழைய CPS திட்டத்தில் நீடித்திருந்தால் ஒரு கோடி ரூபாய் கையில் வைத்திருக்கலாம்.
உங்களை எல்லாம் ஏமாற்றுவது மிகவும் எளிது.
என் பனிக்காலத்தில் என்னுடைய சம்பளத்தில் 10% மட்டுமே பிடித்தால் அரசு பங்களிப்பு வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் வரும். ஒரு கோடி ரூபாய் அரசு வைத்துக் கொண்டு எனக்கு மாதம் ஒரு லட்சம் பென்ஷன் தரும். இது விபூதி அடிக்கும் வேலை.
ஒவ்வொரு ஊழியரும் CPS Account slip ஐ வச்சுக்கிட்டு, இவ்வளவு பணம் சேர்ந்துருக்கு, அவ்வளவு பணம் சேர்ந்துருக்கு... ஓய்வு பெறும் போது லம்ப்பா கிடைக்கும் என்று இனிமேல் உதார் விட முடியாது .
60 ம் வயதில் ஓய்வு பெற்று, பெரும்பாலானவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மண்டையை போட்டு விடுவார்கள். எனவே அரசுக்கு கொழுத்த லாபம் வரும். இது IAS படிச்சவனுக்கு தெரியாதா ?
இப்பவும்,
எனக்கு CPS போதும் அரசு தரும் பென்ஷன் வேண்டாம் என்று முடிவு எடுக்க ஒரு ஆப்ஷன் கொடுத்தால் CPS - ஐ தேர்ந்தெடுப்பவன் தான் புத்திசாலி.
இன்று வரை ஊழியர்கள் CPS க்கு கட்டிய சந்தா தொகையை, அப்படியே GPF அக்கவுண்டில் மாற்றி விடுகிறேன். அதற்குரிய வட்டியும் கணக்கில் சேர்த்து விடுகிறேன். அரசாங்கம் போட்ட காண்ட்ரிபியூஷனை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். என்று சொல்லி, இதே பென்சன் ஸ்கீம் அறிவித்திருந்தால், சங்கங்கள் ஜெயித்ததாக அர்த்தம்.
இப்போ உங்களுக்கு நேந்திரம் வாழைப்பழத்தை சாலட் போட்டு கொடுத்திருக்காங்க என்று தான் எனக்கு தோன்றுகிறது.
உங்க பணத்தை அரசாங்கம் தன் கணக்குக்கு மாற்றி விடும். 0
0
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04 ஜன,2026 - 00:25Report Abuse
கொடுத்தால் இப்படி கடிக்கிறீங்க. சரி, கொடுக்கலைன்னா எப்படி கடிப்பீங்க? 0
0
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04 ஜன,2026 - 00:50Report Abuse
60ல் பணிமூப்படைந்து 61ல் துரதிருஷ்டவசமாக இறக்கும் தருவாயில் அவருடைய மனைவி/கணவர் க்கு கிடைக்கும். 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
03 ஜன,2026 - 20:46 Report Abuse
அதே தான், அப்படித்தான், நீங்களும் நாங்களும் அங்கலாய்த்து என்ன பயன்? உணரவேண்டிய வாக்காளர்கள் உணர்ந்து போதையின்றி புத்திசாலித்துடன் செயல்பட்டால் தான் தமிழகத்துக்கு பிடித்துள்ள தீங்கு நீங்கும் 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
03 ஜன,2026 - 20:31 Report Abuse
நயினார் அவர்களே முக்கியமான விஷயம் என்னான்னா ஜனவரி 6 காலமில்லா வேலை நிறுத்தம். இதுக்கு தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எது முன்னாடி ன்னு பாருங்க. இப்போ கனி முழி யக்கா தலைமையில் வெளியாக இருக்கும் தேர்தள்ளு அறிக்கையில் இதே பென்ஷன் பழைய திட்டம்ன்னு 526 வது ஐட்டமாக இடம் பெறும். 0
0
Reply
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
03 ஜன,2026 - 20:24 Report Abuse
OPS does not require 10% contribution whereas TAPS continues with 10% contribution and Tamilnadu Govt is going to provide what is required in excess of this 10% contribution. To this extent Govt employees have been put to disadvantage. There is nothing to cheer in TAPS announced today by CM Stalin. 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
03 ஜன,2026 - 20:19 Report Abuse
அரசாணையை இப்போது வெளியிட்டு, அதை ஜுலை முதல் நிறைவேற்ற படும் என்று சொல்லி வோட்டை வாங்கி விடுவார்கள். நம்பாதே நம்பாதே திமுகவை நம்பாதே.
தேர்தல் நெறிமுறைகள் மார்ச் முதல் வாரத்தில் வந்து விடும். 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
வெனிசுலாவுக்கு அடுத்ததாக கொலம்பியாவா? அதிபர் பெட்ரோவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
-
காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
-
மாற்று கட்சியினர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
சிறப்பு முகாமில் பெறப்படும் படிவங்களுக்கு விரைவில் முடிவு காண வேண்டும்: பார்வை-யாளர்
-
உழவர் சந்தையில் 58 டன் காய்கறி ரூ.24.29 லட்சத்திற்கு விற்பனை
-
இளம் அறிவியல் சிந்தனையாளர் தேடும் முகாம்: 12 மாணவர்கள் தேர்வு
Advertisement
Advertisement