இளம் அறிவியல் சிந்தனையாளர் தேடும் முகாம்: 12 மாணவர்கள் தேர்வு

நாமக்கல்: மாநில அளவிலான இளம் அறிவியல் சிந்தனை-யாளர்களை தேடும் முகாமில், தேசிய அளவி-லான தேர்வு முகாமிற்கு, 12 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
இளம் அறிவியல் சிந்தனையாளர்களை தேடும், மாநில அளவிலான (வித்யார்த்தி விஞ்யான் மந்தன்) தேர்வு முகாம், ராசிபுரத்தில், இரண்டு நாட்கள் நடந்தது. தமிழகத்தில், பள்ளி அளவில், 6 முதல், பிளஸ் 1 வரை படிக்கும், 5,900 மாணவ, மாணவியர், இணையவழி தேர்வில் பங்கேற்-றனர். மாநில அளவிலான தேர்வில், 28 மாவட்-டங்களை சேர்ந்த, 159 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இத்தேர்வில், இந்திய அறிவியலாளர்களின் வாழ்க்கை படம் வீடியோவா காண்பிக்கப்பட்டு, பதில் கூறச்செய்தல், புதிர் வினாக்கள், தர்க்க வினாக்கள், இயற்பியல், வேதியியல், உயிரி-யியல் மற்றும் கணித பாடங்களுக்கான செய்-முறை தேர்வு போன்றவை நடத்தப்பட்டது.
துவக்க விழாவில், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசுகையில், ''இத்-தேர்வு மூலம், மாணவர்களின் ஒரு எண்ணம், செயல், சிந்தனை ஆகியவை இந்த உலகில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும். அதற்கு இம்மாதி-ரியான தேர்வுகள் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்,'' என்றார். பாவை கல்வி நிறுவன தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.


முன்னாள் முதன்மை விஞ்ஞானி பொன்ராசு பேசுகையில், ''இந்த தேர்வு மாணவர்களிடையே அறிவியல் அணுகுமுறையை வளர்க்க உதவும்,'' என்றார்.மாநில அளவிலான இத்தேர்வில், மதிப்பெண் அடிப்படையில், துாத்துக்குடி, திருச்சி, தேனி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்-களை சேர்ந்த, கோகுல்சேதுராம், மிருதுளாஸ்ரீ ரவீந்தர், தன்வீ, ஹரி சித்தார்த், ஆரோன்ராஜ், அர்-ஜிதா, மொகமது அஹில், சிவசுப்ரமணியன், நிகிதா, சுபிக்ஷா, லோகேஸ் தனுஷ் ஆகிய, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.



அவர்கள், பூனேவில் நடக்கும் தேசிய அளவி-லான தேர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்ப-டுவர். இத்தேர்வை, பொள்ளாட்சி ஆசிரியர் கண்-ணபிரான் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை, மாநில, மாவட்ட அளவிலான அறிவியல் சங்க பொறுப்பாளர்கள் வாசுதேவன், சுதாகர், மணி பிர-கஸ்பதி, ஜெயகாந்தன் ஆகியோர் செய்திருந்-தனர்.

Advertisement