வெனிசுலா அதிபர் கைதுக்கு சீனா கண்டனம்; ஐநா கவலை
நியூயார்க்: வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது; ஐநா பொதுச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை சர்வதேச சட்டங்களையும் வெனிசுலா நாட்டின் இறையாண்மையையும் மீறுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஐநா பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்துள்ள நிகழ்வுகள் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ஐநா விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மரியாதை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.
வாசகர் கருத்து (3)
SUBBU,MADURAI - ,
03 ஜன,2026 - 22:58 Report Abuse
ஐநா எந்த நாட்டின் மீதாவது நடவடிக்கை எடுத்து யாராவது பார்த்திருக்கிறீர்களா? அது எப்போதுமே கவலை மட்டுமே பட்டுக் கொண்டிருக்கும். ஏனென்றால் ஐநா சின்ன நாடுகள் என்றால் அதன் வீரத்தை காண்பிக்க அதட்டி உருட்டும் அமெரிக்கா சீனா போன்ற பெரிய நாடுகள் என்றால் மீண்டும் கவலையில் ஆழ்ந்து விடும். 0
0
Reply
சந்திரசேகர் - ,
03 ஜன,2026 - 21:58 Report Abuse
பழையபடி மீண்டும் அரசர் காலத்து நடைமுறை வருகிறது. ஜனநாயகம் நீர்த்து போகப் போகிறது. அணு ஆயுதம் இல்லாத நாடுகளை எளிதாக கைப்பற்றலாம். சீனா தைவானை எளிதில் கைப்பற்றும் 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
03 ஜன,2026 - 21:49 Report Abuse
அமெரிக்கா உதை வாங்க போகிறது. 0
0
Reply
மேலும்
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்
-
வில்லிசைக்கு ஒரு மாதவி
-
மதுரையின் கதைசொல்லி சரவணன்
-
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு
Advertisement
Advertisement