தமிழக அணி திணறல்
தேனி: தேனியில் 'கூச் பெஹார்' டிராபி தொடர் காலிறுதி (4 நாள்) போட்டி நடக்கிறது. நடப்பு சாம்பியன் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 305 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 213/8 ரன் எடுத்து, 92 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. வத்சல் (52), 175 பந்தில் அரைசதம் அடுத்து கைகொடுத்தார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழகத்தின் ஹேம்சுதேசன் 5, சந்தீப் 5 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து 18 ரன் முன்னிலையுடன் தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. குஷ் பர்தியா (76), நவின் (18) ஜோடி துவக்கம் தந்தது. கேப்டன் அபினவ் (25) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர்.
மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 177/9 ரன் எடுத்து, 195 ரன் முன்னிலை பெற்றிருந்தது. பரத் (34) அவுட்டாகாமல் இருந்தார்.
மேலும்
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி
-
வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் அழைப்பு