பஞ்சாப்பில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; ஆளும் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் திருமண நிகழ்ச்சியின் போது ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமிர்தசரஸில் அமைந்துள்ள மேரிகோல்டு ரிசார்ட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், ஆம்ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, ஆம்ஆத்மி எம்எல்ஏ சர்வன் சிங் துன்னும் அங்கிருந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், ஏற்கனவே 3 முறை ஜர்மல் சிங்கை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக கூறினர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டறிந்து, கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மொஹாலியில் கபடி வீரர் கன்வர் திக்விஜய் சிங்,30, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
பறிபோனது சதம்... கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய கோலி!
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; ஒப்புக்கொண்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு