போதைப்பொருட்களை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: வைகோ பேச்சு
மேலூர்: தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றக் கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ திருச்சியிலிருந்து -மதுரை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அவர் மேலூர் வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது : போதைப்பொருட்களை வைத்திருப்பவர்கள், பயன்படுத்துபவர்களுக்கு கடுங்காவல் சிறை தண்டனை என முதல்வர் ஸ்டாலின் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். போதையின் பிடியிலிருந்து வருங்கால தலைமுறைகள் மீட்கப்பட வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக தான் இந்த நடை பயணம்.
நதிகள் இணைக்கப்பட வேண்டும் என லோக்சபாவில் வலியுறுத்தியுள்ளேன். தி.மு.க.,வை அழித்து விடுவோம் என மத்தியமைச்சர் அமித்ஷா பேசுவது அகங்கார பேச்சு. எங்களிடம் இருக்கும் சக்தியை பயன்படுத்தி தி.மு.க., விற்கு பக்கபலமாக நின்று இயங்குவது என முடிவெடுத்து தான் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும்
-
பறிபோனது சதம்... கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டிய கோலி!
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; ஒப்புக்கொண்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு