இரட்டை இலக்கத்தில் பாஜ உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள்; நயினார் திட்டவட்டம்
கோவை: இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜ உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எங்களுக்கு இபிஎஸ் முதல்வர். அமைச்சரவை குறித்த முடிவுக்கு தேர்தல் முடியணும். வெற்றி பெற வேண்டும். இப்பொழுதே அமைச்சர் என்று எப்படி சொல்ல முடியும். வெற்றி பெற்ற பிறகு பாஜவினர் அமைச்சர் ஆவது குறித்து அப்புறம் பார்க்கலாம்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற எந்த அழுத்தத்தையும் நாங்கள் இதுவரை கொடுக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு எத்தனை இடம் என இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பிறகு நாங்கள் சொல்வோம். இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜவின் உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள்.
தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழகத்தின் தேஜ கூட்டணி கட்சியின் தலைவராக இபிஎஸ் இருக்கிறார். ஒவ்வொரு கட்சியாக எங்கள் கூட்டணிக்கு வருகின்றனர். முதல்கட்டமாக அன்புமணி வந்து இருக்கிறார். அடுத்தது பொங்கல் முடியட்டும், தை பிறந்தால் வழி பிறக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அண்ணாமலை தலைமையில் வேண்டுமானால் இது நடக்கும்.
இவர் தலைமையில் பூஜ்யம் தான்.
Yes if it would have been lead by Annamalai and BJP with not AIADMK alliance it could have been possible
வாய்ப்பில்லை ஐயா
அண்ணாமலை அவர்கள் துணை முதல்வர். வானதி அக்கா நிதி அமைச்சர்.
அப்படியா அதே வைகோ அதே அறிவாலய வாசலில்...அதே அலுமினிய தட்டுடன்.. ஹி.. ஹி..
கூட்டணி அமைத்து பிஜேபி போட்டியிடும் 75 சதவீத தொகுதிக்கு மேல் வெற்றி இருக்கும். ஆனால் எடப்பாடி அதிக தொகுதிகள் தரமாட்டார். காரணம் பொது மக்கள் திராவிட மாற்று கட்சி தேடுகிறார்கள். எடப்பாடியிடம் நன்றி விசுவாசம் குறைவு. பிஜேபி ஆதரவு இல்லாமல் 4 மணி நேரம் கூட முதல்வராக இருக்க திமுக பன்னீர், சசியுடன் சேர்ந்து விடாது.
00 உம் இரட்டை இலக்கம்தான்..
உனக்கு தோல்விதான் கிடைக்கும், 4 கோடி நாயனாரே
எங்க குசராத்திலேயே ? போ போ, உன்னால ஜெயிக்கமுடியாது, அண்ணாமலிய பகச்சுகிட்ட என்னகுத்துன்னு நீ பாக்கப்போற
திமுக படுதோல்வி அடையும்...கொத்தடிமைகள் டாஸ்மாக் சென்று கதறி அழுவார்கள். ஒரே காமெடி
இரட்டை இலக்கில் செல்வதற்கு இரட்டை இலை சின்னத்தில் 2026 தேர்தலில் பாஜக போட்டியிடவேண்டும்டா நயினார் நாகேந்திரன். ஏற்கனவே காய்ந்து கருகிப்போன தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிட்டால் டெபாசிட் இழப்பு மட்டும் ஏற்படும்
மூன்று நபர்கள் விடமாட்டானுக
யார் அந்த மூவார் யூகிக்கவும்மேலும்
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்
-
வில்லிசைக்கு ஒரு மாதவி
-
மதுரையின் கதைசொல்லி சரவணன்
-
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு