காலாவதியான மது விற்பனை; அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: காலாவதியான மது விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல; அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
அவரது அறிக்கை: கோவையில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொது மக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதல்வருக்கு அருவருப்பாக இல்லையா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
காலவதியான மதுவை வாங்கியவர்கள் consumer commission ல் forms வழக்கு தொடுக்க வேண்டும். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
An alcoholic beverage containing 10 or more percentage of alcohol by volume doesnt require any Use by Date or Best Before notification. Wines also dont need any date marking.
ஸ்டாலின் ஜி தமிழ்நாட்டை உச்சத்துக்கு கொண்டு சொல்ல வேலை செய்து கொண்டு இருக்கிறார் அனால் இந்த அண்ணாமலை போல துரோகிகள் ,“அண்ணாமலை மராட்டியர்களுக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் துரோகிதான்” உத்தவ் சிவசேனா கடும் தாக்கு
ஃப்ரீயா குடுத்தா பினாயில் கூட திகழ் உனக்கு ஓகே தான் என்று தெரியும்
“அண்ணாமலை மராட்டியர்களுக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் துரோகிதான்” உத்தவ் சிவசேனா கடும் தாக்கு இவர்களுக்கு இப்போ தான் தெரியுது , இவர் படிச்சவர் FLIGHT பறக்கும்போது EMERGENCY கேட் திறந்த அறிவாளி , இதனால் தான் நாங்கள் இவரை 130000 வாகு வித்தியாசத்தில் தோற்கடிதோம்
சொந்த அனுபவம் போல் உள்ளது!
பால்டேன்?
உன் குடும்பத்திற்கும் கேட்டு பாரு வேணு...
ஏலே திடல் ஓவியா நீ உண்மையான தமிழனாக இருந்தால் இந்த விஷயத்தில் மும்பை தாக்கரேக்களுக்கு எதிராக மீசையை முறுக்கிய அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்தை பதிவிட்டு இருக்க வேண்டும்! அதை விட்டு மஹாராஷ்டிரா பக்கம் போய் விடாதே என்று கூறுவது உன்னுடைய புத்தியைதான் காட்டுகிறது. .
பாஜகவினர் ஒடிசா மற்றும் பீகாரில் தமிழனை அவமதிப்பு செய்த போது இந்த மேல்தட்டு அலப்பறைகள் வாய்மூடி தானே இருந்தனர் என்று பொதுவான வர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
மது காலாவதி ஆகாது. பழசாக பழசாக மதிப்பு கூடும். 50 வருஷ பழைய ஸ்காட்ச் விஸ்க்கி ஒரு பாட்டில் சுமார் 3 லட்ச ரூபாய்.
கள்ளத்தனமாக விற்பனை செய்யும் கள்ளச்சாராயம் குடித்து மடிந்தாலே ருபாய் பத்து லட்சம் கிடைக்கும், அதுவே அரசு விற்பனை செய்யும் காலாவதியான மதுவை குடித்து மாண்டுபோனால் இன்னும் அதிகமாகவே கிடைக்கும். எப்படியும் குடிகாரர்களுக்கு லாபம் தானே. நாம் ஏன் கெடுப்பானேன்?
காலாவதி ஆகாத மது அருந்தினால், காலம் கடந்து சாவான். காலாவதியான மது அருந்தினால் உடனே சாவான். ஒருவேளை தமிழக முதல்வர், மாநிலத்தின் மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவர இப்படி மது விற்பனை செய்து, மக்களை சாகடித்து, மக்கள்தொகையை கட்டுப்படுத்துகிறாரோ...மேலும்
-
இந்தியாவே எனது வீடு, ஆசிரியர்: சர்ச்சைக்கு ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்
-
டிரம்ப் ஏமாற்றிவிட்டார்: ஈரான் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
-
நியூசிலாந்துக்கு ஆரம்பமே தடுமாற்றம்; இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு
-
மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
-
சவுக்கு சங்கருக்கு உடல் நலக்குறைவு
-
நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; லக்னோவில் அவசர தரையிறக்கம்