இந்தியாவே எனது வீடு, ஆசிரியர்; நாட்டுக்கு நான் கடமைப்பட்டவன் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: '' இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இந்தியா எனது உத்வேகம். எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு,'' என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,''கடந்த 8 ஆண்டுகளாக, ஹிந்தி சினிமாவில் இருந்து எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறிவிட்டது. இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்'' எனவும் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரைப் பிரபலங்களே ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சிக்க துவங்கினர்.
இந்நிலையில் சர்ச்சையான தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: ஒரு கலாசாரத்தை இணைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், கவுரவிப்பதற்கும் எப்போதும் எனது வழியாக, இசை இருந்து வருகிறது. இந்தியா எனது உத்வேகம். எனது ஆசிரியர் மற்றும் எனது வீடு.சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், எப்போதும் இசையின் மூலம் கவுரவித்தல் மற்றும் சேவை செய்வதே எனது நோக்கம் ஆகும்.
நான் ஒரு போதும், யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை. எனது நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன். இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இது, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் மற்றும் பன்முக கலாசார குரல்களை கொண்டாடும் ஒரு இடத்தை உருவாக்க எனக்கு உதவுகிறது. இசை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணமும் எனது இலக்கை நிறைவேற்ற உதவுகிறது. இந்த நாட்டிற்கு நான் கடமைப்பட்டு இருப்பேன்.
கடந்த காலத்தை மதிக்கும், நிகழ்காலத்தைக் கொண்டாடும் மற்றும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கு உறுதியளிக்கிறேன். ஜெய் ஹிந்த் மற்றும் ஜெய் பாரத், இவ்வாறு அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
சொல்றத சொல்லிட்டு இப்ப பேச்ச மாத்தறார்
பாலிவுட் சினிமாவில்
பல இந்து கலைஞர்கள் ஓரங்கட்டப் பட்டாலும் அதை அவர்கள் அமைதியாக
ஏற்றுக் கொண்டார்கள். அதே நேரத்தில் ஜாவேத் அக்தர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் போன்றவர்கள் தொட முடியாத உச்சத்தில் இருந்தனர். இவர்கள்தான் பாக்ஸ் ஆபிஸ் முடிவுகளை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தனர். பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் விமர்சனங்களைப் பற்றி பொருட்படுத்தாமல்,
விருதுகள் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளனர். திரையுலகில் அவர்களின் நிலை ஒருபோதும் உண்மையாகவே ஆபத்தில் இருந்ததில்லை. இப்படிப்பட்ட சூழலில் மதம் காரணமாக தனக்கு வேலை மறுக்கப்பட்டது என்ற ரஹ்மானின் கூற்று போலித்தனமானது மட்டுமல்ல கடுமையான கண்டனத்திற்கும் உரியது.
தாய் மண்ணே வணக்கம் என்று பாட்டு போட்ட போது... நாட்டு மக்கள் அனைவரும் தானே உங்கள் பாட்டை கொண்டாடினார்கள்.... அதெல்லாம் மறந்து போய் விட்டது போல் தெரிகிறது.
அப்போ எதுக்கு உங்கள் வாயில் இருந்து.... அந்த வரத்தை வந்தது.... உங்கள் இசையை... மதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரும் தானே நேசித்தார்கள்.
பல தசாப்தங்களாக பாலிவுட் சினிமா இந்து அடையாளத்தை பிற்போக்குத்தனமானதாகவோ அல்லது வில்லத் தனமானதாகவோ மீண்டும் மீண்டும் சித்தரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் பண்பட்டவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும், கதாநாயகர்களாகவும் திரைக்கதைகள் எழுதப் பட்டன. இந்த போக்கு இந்தி சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் காலத்திலும் காணப்பட்டது. 1960 களில் வெளியான முகல் இ ஆசம் போன்ற ஹிந்தி படங்கள் முகலாய ஆட்சியாளர்களைப் பெருமைப்படுத்தின.
அவர்களின் ஆட்சியில் நடந்த கொடூரங்களை மறைத்து அவர்களின் வாழ்க்கையை மிகக் கவனமாக காதல்மயமாக காண்பித்தன. இந்துக்களின் எதிர்ப்பு மற்றும் துன்பங்கள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. கங்கா, ஜமுனா, சரஸ்வதி என்ற திரைப்படத்தில், ஒரு முஸ்லிம் கொள்ளையன் அநீதியால் உருவாக்கப்பட்ட ஒரு சோகமான, கொள்கைப் பிடிப்புள்ள கதாநாயகனாகச் சித்தரிக்கப் பட்டார். அனுதாபம் யாருக்குச் செல்ல வேண்டும் என்பது இதன்மூலம் தெளிவாகத்
திசை திருப்பப் பட்டது.
கவிஞர் பிறைசூடன் அவர்கள் இவர் வீட்டிற்கு சென்ற பொது, திரு நீறு அணிந்தால் வீட்டிற்கு உள்ளே வர கூடாது என்று இவரின் தாயாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவு மத நல்லிணக்கம் கொண்ட நபர் இவர் என்பது இவரது சர்ச்சை பேச்சில் இருந்து வெளி வருகிறது.
உச்சியில் இருந்த போது எல்லாபுகழும் இறைவனுக்கே என்று சொன்னதை இப்போது ஏன் சொல்ல வில்லை? நெட்டிஸன்கள் எகிறியவுடன் ஆசிரியர் வீடு என்று எல்லாம் சொல்ல வருகிறது. டபுள் நாக்கு? டபுள் ஸ்டாண்டர்ட்?
பாலிவுட்டில் பல பிரபலமான இந்து நடிகர்கள் ரசிகர்களால் நிராகரிக்கப் பட்டதால் காணாமல் போகவில்லை. சுனில் ஷெட்டி என்ற நடிகர் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார், ஆனாலும் எந்த காரணமும் இல்லாமல் ஹிந்தி சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய வசூல் நாயகனாக இருந்த கோவிந்தா என்ற நடிகர்
ஒரே இரவில் காணாமல் போனார். அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷய் குமார் போன்றவர்கள் கூட திரையுலகம் அவர்களைக் கடந்து செல்ல ஆர்வமாக இருப்பது போல் தோன்றிய நீண்ட காலக் கட்டங்களை எதிர்கொண்டனர். பாலிவுட் அவர்களைப் பாதுகாத்ததால் அல்ல, மாறாக பொதுமக்களும் ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக நின்றதால் அவர்கள் தப்பிப்பிழைத்தனர். ஆனாலும், இந்தத் தொழில் ஒருபோதும் அவர்களுடையதாக முன்னிறுத்தப் படவில்லை. காலப்போக்கில், மும்பை பாலிவுட் கான்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல சந்தைப் படுத்தப்பட்டது.
இனி எவனும் இந்தியாவை இந்தியர்களை எதிர்த்து இந்தியாவில் வாழ முடியாது. இது மோதியின் அரசாங்கம். இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமானது
சார் நீங்கள் மிகப்பெரிய ரோல்மாடல் நிறைய இந்தியர்களுக்கு... தயவுசெய்து மதத்தை எந்த காரணத்திலும் முன்னிலை படுத்தாதீர்கள்... உங்களை பிடிக்காத இந்தியர்கள் நிச்சயம் யாரும் இங்கே இருக்க முடியாது... இசையில் நீங்கள் தொடாத உயரங்கள் எதுவும் இல்லை....
பொதுவெளியில் பேசும் போது சற்றே கவனமாக இருங்கள்... இந்திய இசை இருக்கும் வரைக்கும் உங்கள் பெயரும் புகழும் நீங்கள் படைத்த பாடல்களும் மறக்கப்படாது..மறைக்கப்படாது...
மா துஜே சலாம்....மேலும்
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
-
ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் அரசை தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி