மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டளிக்க இருக்கும் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் 23ம் தேதி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை மதுராந்தகத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். கூட்டத்தில் கலந்துகொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மக்கள் விரோத திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக முதல் பிரசார கூட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். தேஜ கூட்டணியில் யார் இணைகிறார்கள் என்பதை 23ம் தேதி மேடையில் நீங்கள் பார்க்கலாம்.
எல்லாத் தலைவர்களும் மேடையில் இடம் பெறுவார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்திருப்பதாக சொல்ல முடியாது. ஏற்கனவே, கடந்த தேர்தலில் மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் என இபிஎஸ் கூறியிருந்தார். தற்போது 500 ரூபாய் அதிகரித்து ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இதனை ஈ அடிச்சான் காப்பி என்று சொல்ல முடியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையை சொல்லி இருக்கிறார்கள்.
தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஈ அடிச்சான் காப்பி என்று சொல்வது சரியாக இருக்காது. எந்த அறிக்கை இருந்தாலும் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்குமா என்பது வரும் 23ம் தேதி தெரியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீர்கள். பணம் என்றால் இவர்கள் மனம் மாறக்கூடும். தமிழ் நாட்டு மக்கள் சோற்றாலடித்த பிண்டங்கள் என்று கலைஞர் ஏற்கனவே கூறியுள்ளார்.
நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் என்று சொல்வார்கள்!
தேர்தல் களம் நிச்சியம் மாறும். விஜய் தற்போது ஜோசப் விஜய். இவர் ஜோசப் என்பதனை ஏன் மறைகிறார்? இந்த மாறுதல் பலத்த பின்னடைவு. ஜோசப் புதிய கட்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சவால். தி மு க தனி பெரும் கட்சியாய் தேர்தலில் வெற்றி அடையமுடியாது. இரண்டு கட்சியும் கூட்டணி அமைக்கும். இந்த கூட்டணி வெற்றி அடையும். கூட்டணி வெற்றியால் ஸ்டாலின்பதவியை விட்டுக்கொடுத்து உதயநிதி துணை தலைமை அமைச்சராக வாய்ப்பு உண்டு.
ஆமாம் உன்னை போன்ற அரசியல் வாதிகளிட இருந்து நாட்ட காப்பாற்று வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமேலும்
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
-
ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் அரசை தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி