அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு
திருப்பூர்: திருப்பூரில் உள்ள டாஸ்மாக் பார்களில், ஹிந்தி எழுத்துக்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகள் மிரட்டியது தெரிய வந்துள்ளது.
திருப்பூர் சுற்று பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் செயல்படும் தனியார் பார்கள், என்.எச். ரோட்டை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பார்களின் பெயர் பலகை மற்றும் செல்லும் வழியை குறிப்பிட்டு ஹிந்தியில் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழர்கள் ஹிந்தி கற்கக்கூடாது. ஆனால், டாஸ்மாக் பார் போர்டில் மட்டும் ஹிந்தி வேண்டுமா? இதுவே தி.மு.க.வினர் ஹிந்து எதிர்ப்பின் இரட்டை வேடம்' என, பேசினார்.
இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்களை அழைத்து, 'ஹிந்தியில் போர்டு எழுதி வைத்தால், அந்த பார்களுக்கு சரக்கு வழங்க மாட்டோம்' என, மிரட்டியுள்ளனர்.
இதனால், பார் உரிமையாளர்கள், இங்கு ஹிந்தி கூடாது என்பதை, 'ஹிந்தி கோ நஹின் கரனா சாக்யே' என ஹிந்தியில் எழுதி, போர்டிலுள்ள ஹிந்தி எழுத்துகளுக்கு, கருப்பு பெயின்ட் அடித்து அழித்தனர்.
திருப்பூரில், டாஸ்மாக் அதிகாரிகளின் மிரட்டலுக்கு பணிந்து, பார் உரிமையாளர்கள் ஹிந்தி எழுத்துக்களை அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரி அவர்களே ஸ்டாலின் என்ற பெயரில் ஸ் - என்ற எழுத்து வடமொழி, அதை அழிப்பீர்களா?
தமிழகத்தில் வடமாநில தொழிலாளிகள் பரவலாக வசிக்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் அமைந்து இருக்கும் கடைகளில் பொருள்கள் வாங்குகின்றனர். கடை உரிமையாளர்களும் வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் இவர்களுக்கு வசதியாக ஹிந்தி எழுத்துக்களில் போர்டு வைக்கத்துவங்கி விட்டனர். அப்படிபட்ட அண்ணாச்சி கடையில் எழுதியிருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அழிக்க முயலட்டும் பார்க்கலாம்? 200 ரூ உ பி கள் பாடம் படிப்பர்...
தமிழ்நாட்டில் அத்தனை பேரையும் குடிகாரர்கள் என்ற நிலைக்கு கொண்டு வர திராவிட மாடல் ஆட்கள் மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள் போல் தெரிகிறது.... அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து.... தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது.
நல்ல காமெடி. இந்தி பேசுபவர்களுக்கு டாஸ்மாக் கடையை கண்டுபிடிப்பது சுலபம். தார் பூசியிருக்கும் கடை, டாஸ்மாக் கடை. உங்க கடைமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா ஆபீசர்...
மெண்டல் கோட்டாவில் வந்தவர்களோ அந்த அதிகாரிகள்
இதனால் தமிழர்கள் மட்டும் தண்ணி அடித்து மட்டை அடிப்பார்கள். வாழ்க இந்தி ஒழிப்பு.
இந்தி திணிப்புக்கு எதிரான பாராட்டத்தக்க நடவடிக்கை. மேலும் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
100 rs நோட்டில் ஹிந்தி உள்ளது அதை அழிப்பார்களா ? தமிழ் நாடு முட்டாள்கள் நிறைந்த மாநிலமாக மாறி வருகிறது.
சுலஷைன் பள்ளியில் மட்டுமல்லாது சி பி எஸ் சி பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி சொல்லிக்கொடுப்பதை நிறுத்தினால் உண்மையில் ஹிந்தியை தடை செய்ய முயல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும் இல்லை என்றால் வெறும் வர்த்தக நாடகம் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் வருங்காலத்தை பாழ் செய்யும் உத்தியே என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.
பூக்கடைக்கு போறதுக்கு எதுக்கு போறவழி தெரியனுமா என்ன அதுக்கு போட் வைக்கணுமாமேலும்
-
இன்று இனிதாக...
-
லக்குண்டி கிராமத்தில் 2வது நாளாக அகழ்வாராய்ச்சி கல் கண்டுபிடிப்பு
-
3வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
-
கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த புறநகர் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
தங்கவயலில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
-
பகீர்! 'சட்டவிரோதமாக பெங்களூரு வருகின்றனர் வங்கதேசத்தினர்' மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கவலை