தர்மம் தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
மும்பை: தர்மம் தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;
இந்த உலகில் தர்மம்தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி ஆகும். தர்மத்தினால் இயக்கப்படும் ஒரு வாகனத்தில் நாம் அமர்ந்தால், நாம் ஒருபோதும் விபத்தை சந்திக்க மாட்டோம்.
இந்த முழு பிரபஞ்சத்தையும் தர்மமே இயக்குகிறது. ஒரு அரசாங்கமானது மதசார்பற்றதாக இயங்க முடியும். ஆனால் உயிருள்ள அல்லது உயிரற்ற எந்த உயிரினமும் தர்மம் இல்லாமல் இருக்கவே முடியாது. நமது பாரதம் தர்மத்தால் வழிநடத்தப்படும் வரை அது பொதுவானதாகவே இருக்கும். ஏனெனில் இந்த உலகில் ஆன்மிக அறிவுக்கு தட்டுப்பாடு உள்ளது.
நம் துறவிகளின் கண்ணியத்தையும், அவர்களின் மரியாதையையும் பராமரிப்பது நமது கடமை ஆகும். அதனால் தான் பிரதமர் கூட, வேண்டாம் என்று சொல்வதற்கு தயங்குகிறார். நாம் கடவுளுக்காக வேலை செய்து வருகிறோம் என்பதை எப்போதும் நம் மனதில் நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் கடவுள் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
பாஜக காங்கிரஸ் இரண்டுமே நாட்டின் சாபக்கேடு
தலை தூக்கும் போது தர்மம் அழியும். அதைத்தான் ஈரானில், பாகிஸ்தானில், பங்களாதேஷில் பார்க்கிறோம்.
எனவே தர்மம் தர்மம் என்று பேசுவதை விட, அந்த தர்மத்தை நிலைநிறுத்த விவேகானந்தர் போன்றவர்கள் சொல்லிய செயல்களை வழிக்கு கொண்டு வந்தால் தான் தர்மம் என்பது நிலைக்கும்.
எவனுக்கு எது நடந்தாலும் அதை எந்ராவது ஒரு தர்மத்துக்குள்ளே அடைச்சுடலாம். இப்புடி கேட்டா அப்புடி. அப்புடி கேட்டா இப்புடி.
அப்பாவி வூட்ல சோறு பொங்க வழியில்லை. ...
மூர்க்கம்தான் நம்மை இயக்குது .......
தர்மம் எங்கே இருக்கிறது?
பாலாஜி திமுக இருக்கும் இடத்தில் தர்மம் இருக்காது என்று சொல்றியா
தவறு, அதர்மம் தான் தமிழகத்தின் அயோக்கிய திராவிட அரசாங்க சக்தி, அனைத்து துறை கடை நிலை ஊழியர்களிலிருந்து உயர் அரசு ஊழியர்கள் ,அனைவருமே திராவிட அரசியல்வாதிகளின் ஊழல் திருட்டு அயோக்கிய அடிமைகள்
well said.