விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம்


ஓசூர்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி, கள்ளிமந்தயத்தில் ஒரு கூட்டத்தை முடித்து விட்டு வரும் வழியில், பொய் புகாரின்
அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசார் அவினாசிபா-ளையம் என்ற இடத்தில், அவரையும், விவசாயி-களையும் கைது செய்தனர். இதை கண்டித்தும்,
அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்ப-டியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மத்திய மாவட்ட விவசாயிகள் பாது-காப்பு சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்-டனர்.


இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் கோணப்பன், மாவட்ட மீட்பு அணி தலைவர் திம்மராஜ், ஒன்றிய செயலாளர் நாகராஜ், மத்திய மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், அவைத்தலைவர் நாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


* தர்மபுரி மாவட்ட, தமிழக விவசாயிகள் பாது-காப்பு சங்கம் மற்றும் பீனி ஆறு விவசாயிகள் மேம்பாட்டு நல சங்கம் இணைந்து, பாப்பிரெட்-டிப்பட்டி அடுத்த அலமேலுபுரத்தில்
உண்ணாவி-ரத போராட்டம் நடந்தது. பீனி ஆறு பாசன விவ-சாயிகள் சங்க துணைத்தலைவர் சுந்தர வடிவேல் தலைமை வகித்தார்.

Advertisement