அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை. 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்னையை தீர்த்துவைத்துள்ளோம். அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: அரசு ஊழியர்கள் போராடி கொண்டு இருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு நம்முடைய அமைச்சர் எதிர் கொண்டு இருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?
அரசு ஊழியர்கள் ஏதாவது கோரிக்கை வைத்து போராடுபவது அவர்களின் உரிமை.
ஆனால் உரிமையோடு போராடக்கூடிய போராட்டத்தை கூட முடிக்க வேண்டும், தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு தொடர்ந்து பல முறை அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது.
முழுமையாக தீர்க்கவில்லை என்று சொன்னாலும், 95 சதவீதம் தீர்த்து வைத்து இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை. கொண்டு போய் ஜெயிலில் அடைக்கவில்லை.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை. நமது எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த போது அரசு ஊழியர்களை அதிக சம்பளம் வாங்கி கொண்டு இருப்பதாக கொச்சைப்படுத்தி பேசியதை இந்த நாடு மறந்தவிடவில்லை என்பதையும் உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன். 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்னையை தீர்த்துவைத்துள்ளோம்; அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்பா நீங்கள் இதுபோல் அறுப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை . முதிர்ச்சி அற்ற பேச்சு . உங்கள் தந்தையின் திறமையில் /ஆளுமையில் இம்மி அளவு கூட உங்களுக்கு இல்லை.
தலைவா ஒரு நாளைக்கு ஒரு காமெடி போதுமே, சிரித்து வயிறு வலிக்குது. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாம்
அரசு ஊழியர்கள்தான் தேர்தல் வாக்குச்சாவடி அதிகாரிகள். எனவே அவர்களை மகிழ்வித்து வாக்குத்திருட்டு நடத்துவது தீயமுக வுக்கு கைவந்த கலை. ஆனா தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதையே மறைக்கிறார். குரலற்ற ஒடுக்கப்பட்ட இனம் என்பதாலோ என்னவோ அவமானப்படுத்தப்பட்டார்கள்?
அரசு ஊழியரின் மகிழ்ச்சியா அல்லது குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியானு தெளிவா சொல்லனும்
உங்கள் அப்பா உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கியா. கடனை அடைக்க யார் பணம் தருவது
நீங்க சொல்வதை பார்த்தால் உங்கள் திட்டத்தை எதிர்க்கும் அத்தனை ஊழியர்களும் அதிமுகவா . சோனாமுத்து போச்சா ?
அவையின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - முதல்வர் ... உங்களை புகழ்ந்து ஆளுங்கட்சி, கூட்டணிக்கட்சிகள் பேசுவது. அவையிலேயே நீங்களும் பாடியிருக்கிறீர்கள். அது நேரத்தை மிச்சப்படுத்தும் வேலையா
மோடி 8 வது PAY கமிஷன் அமைத்து கொடுக்கிறார் யார் வீட்டு பணம்
திமுக ஆட்டைய போட பிளான் பண்ணுது அறிவிலி
ஓவர் நைட் இல் ஒரு லட்சம் பேரை எஸ்மா டெஸ்மா என்று, DISABLE PERSON எல்லாம் அரசு குடி இருப்பை விட்டு ஓட விட்டாரே AMMANI அந்த ஆளுமை இதை எடப்பாடி எப்ப மறுப்பார்
அரசு ஊழியர்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தால் ஓய்வூதியம் அறிவித்த உங்களுக்கு ஊழியர் சங்கங்களால் ஏற்பாடு செய்யப் பட்ட பாராட்டு விழா ரத்து செய்யப் பட்டது ஏன்? தலைமை செயலக அலுவலர் சங்கக் கட்டடத்தை ஊழியர்களே முற்றுகை இட்டது ஏன்?
அரசு ஊழியர்களின் வாயை அடைத்தால் போதுமா? யார் அச்சன் வீட்டுப்பணம்?மேலும்
-
கவர்னர் உரையாற்றும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதே தீர்வு: முதல்வர் ஸ்டாலின்
-
வேலை உறுதி திட்டத்தில் மாற்றத்தை எதிர்த்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: கார்கே
-
குரோஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நாசவேலை; வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்
-
போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவுவது ஏன்: திமுக அரசு மீது நயினார் கேள்வி
-
அமைதி வாரியத்தில் சேர அனைத்து நாடுகளுக்கும் விருப்பம்: சொல்கிறார் டிரம்ப்
-
லஞ்சம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ மிரட்டல்: ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் திடுக்கிடும் புகார்