வேலை உறுதி திட்டத்தில் மாற்றத்தை எதிர்த்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: கார்கே
புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் வலுவாக குரல் எழுப்பும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அறிவித்துள்ளார்.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை பார்லி.,யில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 22) டில்லியில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது.
தொழிலாளர்கள் மாநாட்டில் கார்கே பேசியதாவது:
நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்வது பொதுமக்களின் நினைவிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை அகற்றுவதற்கான முயற்சி என்றும், 'கிராம ஸ்வராஜ்' கொள்கையை பலவீனப்படுத்தும் செயல்.
டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட 'விக்சித் பாரத் - ரோஜ்கார் அஜீவிகா மிஷன்' என்ற புதிய சட்டத்திற்குப் பதிலாக நுாறு நாள் வேலை உறுதி திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
இப்புதிய சட்டத்திற்கு எதிராக ஜனவரி 10 முதல் 45 நாட்கள் தழுவிய வேலை உறுதி திட்டத்தை காப்போம் போராட்டம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரில், இச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரவும், ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுவோம்.
இவ்வாறு கார்கே பேசினார்.
இந்திய பொருளாதாரம் முன்னேற்றத்தையும் எதிர்த்தும் தான் குரல் எழுப்புகிறீர்கள் என்னக்கத்தினாலும் அழுது புரண்டாலும் இந்தியா முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
அப்பப்ப தான் இருக்கிறேன் என்று காட்டிக் கொண்டு இருக்கிறார்.
அதான் மகன் மந்திரி ஆகிவிட்டாரே, இன்னமும் எதற்கு அரசியல். பெயருக்குத் தான் நீங்கள் தலைவர்.
You are not part of the so called
"HIGH COMMAND " which consists of
Mother, son, daughter trio, with the son in law
as special permanent invitee.
உனக்கு என்ன தான் பிரச்சினை.... 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டது ...உங்களுக்கு பிடிக்கவில்லையா.... அது சரி நாட்டுக்கும்... மக்களுக்கும் எது நல்லது நடந்தாலும்... கான் கிராஸ் கட்சி ஆட்களுக்கு பிடிக்காதே !!!
100 நாள் 125 நாள் ஆவது நல்லதே. பெயர் மாற்றத்திற்காக பார்லி முடக்குவது காங்கிரஸிற்கு அழகல்ல. முந்தைய திட்டத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகள் தானே சரி செய்யப்பட்டு உள்ளன.
சபையை சீர்குலைக்க காங்கிரஸ் ஒரு யுக்தியை தேடி பிடித்து விட்டது சபையை புறக்கணித்த வெளியேறுபவர்களுக்கு எம்பி கேண்டினில் உணவு அளிக்கப்படாது என்ற ஒரு நடைமுறையை பின்பற்ற வேண்டும் நாட்டு மக்களின் பணமாவது மிச்சம் ஆகட்டும்
ஏண் இன்னுமா.....
உங்களால் பேசவே முடியாது.பிறகு
எப்படி குரல் எழுப்புவீர்கள்.முதலில்
உங்கள் கட்சி யில் உள்ள வேறுபாடுகளை களையகுரல் எழுப்புங்கள்.மேலும்
-
இந்தியாவுடன் சேர்ந்து எதிர்காலத்துடன் இணையுங்கள்: முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
-
திமுகவை அகற்றி தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம்: அண்ணாமலை
-
பெங்களூருவில் கேரளக் கலைத் திருவிழா
-
ராணுவ வலிமையால் மோதல்களை தீர்க்க முடியாது: மோகன் பாகவத்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி
-
மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்