பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சவுந்தர்ய ஞானாம்பிகை உடனாகிய ராமநாதீஸ்வரர் கோவிலில் 87வது பிரம்மோற்சவ திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தையொட்டி நேற்று காலை ராமநாதீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது.

தொடர்ந்து வரும் 30ம் தேதி ஞானாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 31ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தர்மகத்தா வெற்றிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்ற னர்.

Advertisement