எந்த நேரத்திலும் எதுவும் மாறும்; தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது: பிரேமலதா
சென்னை: '' தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது,'' என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: எல்லோரும் தொகுதி அறிவித்துவிட்டார்கள், வேட்பாளர்கள் அறிவித்துவிட்டார்கள் என கேட்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்க போகிறார்கள். தேமுதிக எங்களது குழந்தை. அவர்களுக்கு என்ன, எப்பொழுது நல்லது பண்ண வேண்டும் என்று ஒரு அம்மாவாக எனக்கு கடமைகள், பொறுப்பு அதிகமாக இருக்கிறது.
உரிய நேரத்தில் எல்லோரும் போற்றும் ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம். ரகசியம் ஏதும் கிடையாது. இந்த முறை வெளிப்படையாக தான் கூட்டணி அமைப்போம். கூட்டணி முடிவு செய்யப்பட்டால் முதலில் மீடியாக்களை அழைத்து அறிவிப்பேன். தேஜ கூட்டணியில் இணைவது குறித்தும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம். யார் வேண்டும் என்றாலும் எந்த கூட்டணியும் அமைக்கலாம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில், தெளிவான சிந்தனையுடன் நல்ல முடிவு எடுப்போம். தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வர தான் போகிறது. 2026ல் நல்ல ஆட்சி அமைய வேண்டும். அது தான் எங்களது கோரிக்கை. நல்லதே நடக்கும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
தேமுதிக,மதிமுக, திமுக என்ற குடும்ப கட்சிகளை புறக்கணிக்க முடிவு செய்து விட்டார்கள்...வரும் தேர்தலின் இந்த கட்சிகளை அடித்து விரட்டுவார்கள்...
இது எல்லாம் ஒரு பிழைப்பு ?
அந்த அளவு ஒர்த் இல்லை.
அடேங்கப்பா ... பவுடரு ....அதிகமா பூசிக்கிட்டாங்க இந்த அம்மையார் .....
நீ நடுத்தெருவில் நிற்பது உறுதியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் நேரத்தில், பெட்டி மாற்றும் கட்சிகள் 100 க்கு மேல் உள்ளது. இது அரசியலில் ஊழலை அதிகரிக்க செய்கிறது.
இதில் உள்ள அல்லக்கைகள் வணிகர்களை, சிறு தொழில்கள் செய்ய விடாமல், பெரும் தொழில்களில் தினமும் பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல.
கட்சிய நல்ல விலைக்கு வித்துர வேண்டியதுதானே
கேப்டன் பேரை நாசம் செய்து கொண்டுள்ளது இந்த ஜோக்கர்..
உன்னோட பேராசையாலேயே அந்தாளு போய் சேர்ந்துவிட்டார், இருந்தும் நீ திருந்தியபாடில்லை.
ஒன்றுமற்ற ஓரு ஓட்டை கட்சியை வைத்துக்கொண்டே இவ்வளவு பீலா விடுகிறார்கள். திரும்பவும் 2016 நிலையே வரும். எனவே கவனுத்துடன் வார்த்தை விடவும்.மேலும்
-
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
-
நிதி பெற்று தருவதாக மோசடி; லக்னோ வாலிபர் கைது
-
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை: திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி