பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி இருக்க கூடிய நிலையில், மேலும் புதிதாக 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* 8,911 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக, 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,200 கிலோ மீட்டர் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.
* 33 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விவசாய தொழிலாளர்கள் , கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மாதாந்திர ஓய்வூதியங்கள் பெற்று வருகின்றனர். தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
* சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க ஏதுவாக, ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (9)
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
24 ஜன,2026 - 13:57 Report Abuse
பள்ளிபாளையத்தில் கிட்னி எடுத்த அராஜக கும்பல் .....பள்ளிப்பாளையம் பெண்ணை பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து சிங்கப்பூர் அழைத்து சென்று கிட்னி எடுத்துவிட்டதாக பெண் புகார் ..சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் புகார் அளித்த பெண் ..திருச்சி டாக்டரை அடுத்து கிட்னி எடுக்கும் படலத்தில் இப்பொது சிங்கப்பூர் வரை கிட்னி திருடு ....இதுதான் விடியல் வளர்த்த முன்னேறிய தமிழ் நாடு ....வடக்கன் மாநிலத்தை விட படு கேவலமாக இருக்குது ... 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
24 ஜன,2026 - 12:27 Report Abuse
கொரோனா கொடுநோயின் நினைவாக அணைத்து வகுப்பு மாணவர்களும் அணைத்து வருசமும் ஆள் பாஸ் 0
0
Reply
Sun - ,
24 ஜன,2026 - 12:20 Report Abuse
2021 தேர்தல் வாக்குறுதியிலேயே இப்ப சொன்ன சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என சொல்லி இருக்கலாமே? தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என அப்போது சொல்லி ஏன் அவர்களை நம்ப வைத்தீர்கள் மாண்புமிகு முதல்வரே? இது தன்னை நம்பியவர்களை ஏமாற்றும் செயல் இல்லையா? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 ஜன,2026 - 12:14 Report Abuse
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்... இந்த வாக்கியமே தவறு. கவர்னர் தனது உரையை முற்றிலும் வாசிக்கவில்லை. தேசியகீதம் பாடாததால் கவர்னர் தன்னுடைய உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். மேலும் அவருக்கு தயார் செய்த உரையில் ஒரே பொய். அதை வாசிக்க அவர் மனமில்லாமல் வெளிநடப்பு செய்தார். 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
24 ஜன,2026 - 12:00 Report Abuse
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 3,400 ரூபாயாக உயர்வு ,தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் இப்படி அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு ‘ஜாக்பாட்’.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
உடனே பொருளாதார மேதைகள் இதனால் அரசு கடன்காரன் ஆகி , இதனால் பலன் அடைவது லக்ஷ கணக்கானோர் ஆனால் ஓவர் 4 கார்பொரேட் ஏழைகளுக்கு 21 லட்சம் கோடி தள்ளுபடி இதனால் எல்லாம் நாடு நஷ்டம் ஆகாதா , கிரேட் எகானாமிஸ்ட நானா பல்கிவாலா வே தோற்றிடுவார் இவர்களிடம் 0
0
guna - ,
24 ஜன,2026 - 12:21Report Abuse
எப்பவுமே உனக்கு இருநூறு தான் ஆகியர் தோன் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
24 ஜன,2026 - 11:49 Report Abuse
அவர்களோட பேப்பரை திருத்தி மார்க்கை போடுவார். 0
0
Reply
Balaa - chennai,இந்தியா
24 ஜன,2026 - 11:24 Report Abuse
போட்டி போட்டுக் கொண்டு இலவசங்கள் அறிவித்து தமிழக மக்களை யாசகம் ஏந்தும் மனப்பான்மைக்கு தள்ளி விட்டார்கள். உண்மையாக உழைப்பவனுக்கு ஒன்றும் கிடையாது. 0
0
Venugopal, S - ,
24 ஜன,2026 - 11:30Report Abuse
இந்தமுறை நான்கு வருடத்தில் ஐந்து இலட்சம் கோடி கடன். அடுத்த முறை இரண்டே ஆண்டில் அடுத்த ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கி உலகிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாறும்...இப்படிக்கு விடியா மாடல் 0
0
Reply
மேலும்
-
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
-
நிதி பெற்று தருவதாக மோசடி; லக்னோ வாலிபர் கைது
-
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை: திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement