குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் -மீட்டு விடுவித்த வனத்துறையினர்
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா குடியிருப்பு பகுதியில் புகுந்த, 12 அடி நீள ராஜநாகம் மீட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே தேவாலா மூச்சுக்குன்னு குடியிருப்பு பகுதியில், ராஜநாகம் ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தேவாலா வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான வனக்குழுவினர், அப்பகுதிக்கு சென்று குடியிருப்பு அருகே காணப்பட்ட, 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை, பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, ராஜநாகத்தை எடுத்து வந்து, கிளன்ராக் அடர்த்தியான வனப்பகுதியில் விடுவித்தனர். இதனால், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்
Advertisement
Advertisement