ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
டெஹ்ரான்: அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஈரானின் புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், 6,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மேலும் 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியாக போராடி வரும் ஈரான் மக்களை, அந்நாட்டு அரசு துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கை வாயிலாக கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஈரான் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் முக்கிய படையான புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
இந்த முடிவு வெளியுறவுத்துறை அமைச்சர்களால் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. புரட்சிகர காவல் படையின் மூத்த தளபதிகள் உட்பட 15 ஈரான் அதிகாரிகள் மீது ஈரான் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
புரட்சிகர காவல் படை
1979 ம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மதகுருமார்களின் தலைமையையும் அது நிறுவிய அரசியல் அமைப்பையும் பாதுகாப்பதற்காக புரட்சிகர காவல்படை உருவாக்கப்பட்டது. இது ஈரான் ராணுவத்துடன் இணைந்து செயல்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த படையாகும்.
1980களின் ஈரான்- ஈராக் போரின் போது முக்கியத்துவம் பெற்றது. போருக்குப் பிறகு அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தபோதிலும், அந்த அமைப்பை தனியார் நிறுவனமாக விரிவுபடுத்த ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக்கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும்
France and Spain have withdrawn their objections. All 27 EU member states now back the designationமேலும்
-
டில்லி காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, சிபிஆர் மரியாதை
-
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே பயங்கர சாட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
வாரிசு அரசியல் என்பது இத்துப்போன குற்றச்சாட்டு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 சரிவு