அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
சென்னை: 'செல்வம் பெருகும் என கூறியதால், சபரிமலை அய்யப்பன் கோவில் நகைகளை வைத்து எங்கள் வீட்டில் பூஜை செய்தோம்' என, போலீசாரிடம் நடிகர் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவாரபாலகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தின் எடை, 4 கிலோ அளவுக்கு குறைந்தது. இதுகுறித்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, அய்யப்பன் கோவில் முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் தலைமை அர்ச்சகர் போல செயல்பட்டு வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. இந்த விசாரணையின் போது, செப்பனிடும் பணிக்காக தங்கக்கவசம் எடுத்து வரப்பட்ட போது, சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் அது தொடர்பான படமும் சிக்கின.
இதன்படி, சென்னையில் ஜெயராம் வீட்டில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஜெயராம் அளித்துள்ள வாக்குமூலம்:
நான், 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். இதனால், கோவிலின் முக்கிய பிரமுகராக செயல்பட்டு வந்த உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோவில் கருவறை கதவுகளில் இருந்த தங்கக் கவசங்களை சீரமைத்து மெருகேற்ற, சென்னைக்கு எடுத்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
'அந்த நகைகளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்' என்றும் கூறினார். அவரின் பேச்சை நம்பி, எங்கள் வீட்டில் பூஜை செய்தோம். அது திருட்டு நகைகள் என எனக்கு தெரியாது.
கோவிலுக்கு சென்று வந்த பழக்கத்தால், அவரை நம்பிவிட்டேன். இப்பூஜைக்காக அவருக்கு பணம் எதுவும் தரவில்லை. அய்யப்பன் கோவில் கருவறைக்கு சென்று வழிபட, அவர் உதவி செய்தார். நகைகள் திருடப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா பரவாயில்ல ஆனா இங்க கண்ணுக்கு தெரிஞ்சே பல கோல்ட் பணம் புல்லர்ஸ் இருக்கானுங்க அதும் முதல்வர்ன்ற போர்வைல
அங்கே தங்க கவசம் தான், ஆனால் இங்கு திருட்டு திமுக அண்ட் HR ஆட்கள் கோவிலையே ஆட்டையய் போடுகிறார்கள். திருட்டு திமுக ஆட்கள் உருக்கின தங்கம் எவ்வளவு என்று aiadmk ஆட்சி வந்தால் தெரியும். எவ்வளவு கணக்கான கோடிகள் திருட்டு போய் இருக்கிறது என்று.
ஒரு சில அவால்ல கோவில் நிர்வாகம் கணக்கு வேண்டும்னு சொல்றது ithukuthanaa
இவன் போன்று வொவொரு குடிமகனும் தன்னுடைய வீட்டில் செல்வம் பெருகவேண்டும் என்று கேட்டு அங்குள்ள தங்க நகைகளை கேட்டால் இவனுக்கு கொடுத்ததுபோல கோவில் பூஜாரி/நிர்வாகம் கொடுக்குமா?
ஏன், சினிமாவில் சம்பாதித்தது போதாதா? ஏன் இந்த பேராசை உனக்கு? பேராசை பெருநஷ்டம் - தெரியாதா உனக்கு?
தம்புடூ எதுக்கும் தமிளு நாட்டுல மற நிலையத் துறை - -வந்து - அற நிலையத் துறை பொறுப்பில கிட்டத்தட்ட எல்லாக் கோவிலும் இருக்கரதால ஒரு தபா முளுசா சப்ச்சாடா எடை போட்டுப் பாக்கரது நல்லது தம்புடு அங்கிட்டும் இங்கிட்டுக் கன்னைக்சன் இருக்கலாம்ல?
அது சரி ஜெய்ராம், நாற்பது ஆண்டுகளாக மலைக்குச் செல்லும் உமக்கும், இப்படி என்றாவது முன்பு துவாரபாலகர்கள் தங்கக் கவச்சம் "ஆட்டையைப் போடுவதற்கு - - வந்து - - செப்பனிடுவதற்கு" என்று என்றுமே வெளியில், அதுவும் சென்னைக்கு - போனதில்லை என்பது தெரியாதா நடிகரே? அதுதான் சரி போகட்டும். அப்படிச் சென்னைக்கு வந்த கவச்சத்தை முன்பு என்றாவது இப்படி உமது வீட்டில் வைத்துப் பூசை செய்தது உண்டா? இல்லையென்றால் இப்போது மட்டும் ஏன் இந்த "செல்வம் பெருக்கும்" ஆசை உமக்கு வந்தது? ஒருவேளை இப்படி வீட்டில் வைத்துப் பூசை செய்தால் அவ்வப்போது கொச்சம் கொச்சம் ச்சுரண்டி, அது யாரு உண்ணிக் குட்டியா? அந்த ஆளுடன் "அண்டர் ஸ்டாண்டிங்" வைத்துச் செல்வத்தைப் பெருக்கும்
சூப்பரு ஐடியாவா இருக்குமோ
அய்யப்பன் கோவில் கருவறைக்குள் சென்று வழிபட உதவினாரா? அப்போ, யார்வேண்டுமானாலும் கருவறைக்குள் போகலாமா? இதை இப்பொழுதான் கேள்விப்படுகிறேன்
பணம் வர வர பேராசை அதிகம் ஆகிறது. கருவறையில் வழிபாடும் இறைவனை வீட்டுக்குள் அதே பலத்தோடு கொண்டு வரமுடியாது, கூடாது. அதனால் தான் கும்ப அபிஷேகம் செய்து, மந்திர உச்சாடனம் மூலம் இறைவனை கர்பகிரஹத்தில் நிறுவுகிறார்கள். பணம் கொடுக்காமல் அந்த போத்தி ஐயப்பன் நகைகளை இவர் வீட்டுக்கு கொண்டு வர வாய்ப்பே இல்லை. பல விஷயங்களில் பூசாரியை, போலி சத்துக்களை நம்ப கூடாது.
தவறான வழிபட்டு முறைகள் குடும்ப அழிவை கொண்டு வந்து சேர்க்கும்.
ஹிந்து ........
ஆமாம் இவர் ஹிந்து ஆனால் உங்க ஆளுக்கு பிடித்தது சின்ன சந்து.மேலும்
-
பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்
-
பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
-
விலை நிலவரம் : தங்கம் வெள்ளி
-
அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
-
ஃபண்டு பயோடேட்டா:ஃபண்டு பயோடேட்டா
-
ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000