தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
சென்னை: ''தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தில், 307.24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் 1,800 குடியிருப்பு கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தற்காலிக ஊழியர்கள் பணி, ஆண்டுக்கு 11 மாதங்கள். மீண்டும் பணியை தொடரும் போது, இடையில் ஒருநாள் விடுமுறை வழங்கிவிட்டு பணிக்காலம் புதுப்பிக்கப்பட்டு பணியை தொடர்வர்.
இதுபோன்று பணியில் இருப்போரை, எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் பணி நிரந்தரம் செய்யாது.
வேறு மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்திருக்கின்றனரா என, அண்ணாமலையிடம் கேட்டு சொல்லவும். பணி நிரந்தரம் செய்தால், நீதிமன்றம் தலையிடும்.
இதை தெரிந்து கொண்டே, ஒரு சிலர் துாண்டிவிட்டு போராட்டம் செய்கின்றனர் . ஏற்கனவே இதுபோல் துாண்டிவிட்ட நபர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம். போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும்.
தேர்தல் நடக்கும் சூழலில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில், இதுபோன்று துாண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும்.
இந்த நோக்கத்தில் தான், போராட்டம் நடத்துவது, 'பேஷன்' ஆகிவிட்டது என, நேற்று முன்தினம் சொல்லி இருந்தேன். போராட்டங்களை கொச்சைப்படுத்துவது நோக்கமல்ல. நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம்.
இதற்கு முன் ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரை எதிர்த்து போராட்டம் நடத்தி, அவரிடம் விவாதமும் செய்துள்ளேன். அதனால், தொழிற்சங்கம் குறித்து எனக்கு நன்றாக தெரியும்.
தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, இந்தியா முழுதும் உள்ள 36 மாநிலங்களில், தமிழகத்தில் தான் மிகக்குறைந்த அளவில் குற்றச்செயல்கள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு அலுவலகங்களில் பினாமி ஊழியர்களை அப்பாயின்ட் செய்து வேலை வாங்குகிறார்கள் அரசு நிரந்தர ஊழியர்கள். பின்னர் காலப் போக்கில் அந்த பினாமி ஊழியர்கள் தங்கள் எஜமான் அரசு அதிகாரிகளை உரிய விதத்தில் கவனித்து நேரடியாக அரசு ஊழியர்களாக நியமனம் பெறுகிறார்கள். இது உண்மை. இது போலத்தான் இந்த தற்காலிக ஊழியர்களும். இந்த தற்காலிக ஊழியர்கள் தங்களது எஜமான் அரசு ஊழியர்கள் அறிவுரை படி இந்த பணி நிரந்தர போராட்டம் நடத்துகிறார்கள். சில தற்காலிக ஊழியர்கள் கவனிக்கும் விதத்தில் தங்கள் மேலதிகாரிகளை கவனித்து நேரடியாக பணி நிரந்தரம் பெறுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் எஜமான் அரசு அதிகாரிகள் தொந்தரவு செய்யும் போது எஜமான் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த சொல்லி ஆலோசனை தருகிறார்கள். இந்த போராட்டம் சலிப்படைந்த பின்னர் இந்த தற்காலிக ஊழியர்கள் மீண்டும் எஜமான் அரசு ஊழியர்கள் சொல்படி கேட்டு மீண்டும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். 11 மாத பணிக்கு பின்னர் ஒரு நாள் விடுமுறை விட்டு மீண்டும் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்துவதே சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி அரசு மந்திரி செய்யும் தில்லுமுல்லு தானே. உண்மையாகவே அங்கு பணிக்கு ஆட்கள் வேண்டும் என்றால் 11 மாதம் முடிந்தவுடன் பணி வழங்க வேண்டும். அதற்கு மாறாக மீண்டும் அதே தற்காலிக ஊழியர்களை தற்காலிக ஊழியர்களாக எதற்கு பணி அமர்த்த வேண்டும். இரண்டு காரணங்கள் ஒன்று எஜமான் அரசு ஊழியர்கள் பணி சுமை இன்றி ஜாலியாக இருந்து ஆளுங் கட்சிக்கு ஆதரவாக செயல் பட இந்த தற்காலிக ஊழியர்கள் இருக்கலாம் அல்லது இந்த தற்காலிக ஊழியர்களை வைத்து ஆளுங்கட்சி தங்களுக்கு சாதகமான செயல்கள் செய்து கொள்ளலாம். மிகவும் முக்கியமானது தாற்காலிக ஊழியர்கள் மஸ்டர் ரோலில் ஊழல் செய்து அரசு பணத்தை கொள்ளை அடிக்க தற்காலிக ஊழியர்கள் என்பதே ஒரு திட்டம் இட்ட சதி வேலை. கருணாநிதி காலத்தில் மஸ்டர் ரோல் ஊழல் மிக பிரசித்தம். அரசு கஜானா பணம் விஞ்ஞான ரீதியாக ஆட்சியாளர்கள் கைக்கு மாறும். ஆகவே தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.
இன்னும் கொஞ்ச நாளில் நீயா தற்காலிகம் தான்.
ஒரு நாள் விடுப்பு கொடுத்து, மீண்டும் பணியில் புதிதாக சேர்வது போல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தாங்கள் எப்போதும் நிரந்தர ஊழியர்கள் ஆக முடியாது என்ற சட்டம் தெரியாதா. அப்படி தெரிந்தும் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பியது அவர்களின் முதல் தவறு. தற்போது அதற்காக போராடுவது இரண்டாவது தவறு. தேர்தல் வாக்குறுதிகளை எழுத்து மூலம் திமுக, இவர்களுக்கு கொடுத்திருந்தால், சட்ட திருத்தம் செய்து இவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலும். ஆனால் அது சுலபமாக நடக்க கூடியது அல்ல.
அப்போ நாங்களும் உங்களுக்கு வோட்டு போட முடியாதுன்னு அவர்களும் கூறலாம். தேர்தல் போது உங்கள் சலுகைகளையும் ஏற்று கொள்வார்கள் வோட்டு போட மாட்டார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஏன் ஒரு நாள் லீவு தொடர்ந்து மறுநாள் புதிதாக நியமனம்
மாசு பட்ட அரசியல் வியாதிகள்
கரெக்ட் . அதே சந்தானம் டைலாக் தான் அப்ப என்ன. .............. வாக்குறுதி குடுத்தீங்க
இவரை ஆளை பார்த்து சிரிப்பை பார்த்து அப்பாவியானவர் என்று எண்ணிவிடவேண்டாம். ஊழல்கள் லஞ்சங்கள் விஷயத்தில் படு கில்லாடியாம் இவர்.
சகட்டு மேனிக்கு தேர்தல் வாக்குறுதிகள் நடை முறை ஒவ்வாத வாக்குறுதிகள் பொய் சொல்லி எதற்காக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் ஏமாற்றி திமுக கும்பல்
அமைச்சர் சுப்பிரமணியன் சொல்வதை வரவேற்கிறேன். அவர்களை பணி நிரந்தரம் செய்தால் அரசுக்கு கூடுதலாக செலவாகும். பிறகு தற்குறி டுமிழர்களுக்கு இலவசங்களை வாரி இறைத்து ஓட்டுக்களை பெற்று மீண்டும் கட்டுமர திருட்டு திமுக ஆட்சிக்கு வந்து ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க வாய்ப்பில்லாமல் போய்விடும். தற்குறி டுமிழர்களுக்கு இலவசங்கள் கொடுக்க அரசுக்கு பணம் தேவை. அதனால் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் எந்த அரசு வேலையும் கொடுக்காமல் எல்லாவற்றையும் தற்காலிக ஊழியர்களாக மாற்ற சட்டம் இயற்றவேண்டும்.மேலும்
-
பசுமை மின் வழித்தட திட்டம் - 3: மத்திய அரசு நிதி பெறுவதில் தமிழக மின் வாரியம் சுணக்கம்
-
பாதுகாப்பு துறை பங்குகள் ஒரு மாதத்தில் 23% உயர்வு
-
விலை நிலவரம் : தங்கம் வெள்ளி
-
அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு பரிசுகள் அறிவிக்காததால் ஏமாற்றம்
-
ஃபண்டு பயோடேட்டா:ஃபண்டு பயோடேட்டா
-
ஏறுமுகத்தில் குண்டு மிளகாய் குவின்டால் ரூ.33,000