செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ செடி கருகுவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. பூக்கள் விலை அதிகரித்த போதும், விவசாயிகளுக்கு லாபம் இல்லை என தெரிவித்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,000 ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, காவேரிப்பட்டணம், திம்மாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.

Advertisement