தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
மதுரை: பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நிதியும் வேண்டும்; வேந்தர் பதவியும் வேண்டும் என்கிற தமிழக அரசின் பிடிவாதத்தால் சித்தா பல்கலைக்கான ஒப்புதல் கிடைக்காமல் இழுபறி நிலவுகிறது.
பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ் பல்கலை அமைக்க மத்திய அரசு விரும்புகிறது. ஆயுஷ் பல்கலையின் கீழ் ஆயுர்வேதா, யுனானி, யோகா நேச்சுரோபதி, சித்தா, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெறமுடியும். வெவ்வேறு மாநிலங்களில் ஆயுர்வேதா பல்கலையின் கீழ் தான் ஆயுஷின் 5 துறைகள் செயல்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் தாயகம் தமிழகம் என்பதால் இங்கு சித்தா பல்கலை அமைக்க விரும்பியதில் முதல்வர் ஸ்டாலின் எண்ணம் சரிதான். அதை செயல்படுத்திய விதத்தில் தான் மத்திய அரசின் இணக்கமின்மை வெளிப்பட்டுள்ளது.
சித்தா பல்கலை அமைவதற்கான காலதாமதத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தாலும் பல்கலையின் வேந்தராக தமிழக கவர்னருக்கு பதிலாக தமிழக முதல்வர் என மாற்றப்பட்டதே முக்கிய காரணம்.
சித்தா பல்கலைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பதைக் காட்டுவதற்காக திட்ட வரைவு தயாரிக்கும் போதே, முதல்வரை வேந்தராக நியமித்து வரைவு தயாரிக்கப்பட்டது. இது பல்கலை மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.
அந்தரத்தில் நிற்கிறது
மத்திய அரசின் யு.ஜி.சி., பல்கலைகளுக்கு நிதியுதவி வழங்குவதால் அந்தந்த பல்கலையின் வேந்தராக மாநில கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பல்கலை அமைப்பதில் இந்த முறை மாறுபடுகிறது.
பல்கலை நிறுவனரே வேந்தராக செயல்படமுடியும். யு.ஜி.சி., நிதியுதவி வேண்டுமெனில் சித்தா பல்கலைக்கு கவர்னரே வேந்தராக இருக்க முடியும். இந்த இரட்டை நிலைப்பாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வெளியே வரவேண்டும் என்கின்றனர் சித்தா டாக்டர்கள்.
அவர்கள் கூறியதாவது: நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் யார் வேந்தராக இருந்தால் என்ன என்ற மனப்பான்மை முதல்வருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். வேந்தராக முதல்வர் தான் வரவேண்டும் என விருப்பப்பட்டால் யு.ஜி.சி.,யிடம் நிதியுதவி கேட்க வேண்டாம்.
தமிழக அரசே சுயமாக சித்தா பல்கலை அமைக்கலாம். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் இடையே பல்கலைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள இந்திய மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் தற்காலிக அலுவலகம் செயல்படுகிறது.
ஒரு கல்லில் இரு மாங்காய்
இந்த இடத்திற்கு பதிலாக பழநியில் ஏற்கனவே சித்த மருத்துவக் கல்லுாரிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கல்லுாரியும், பல்கலையும் ஒருசேர அமைக்கலாம். பழநியில் சித்த மருத்துவக் கல்லுாரி அமைக்க ஏற்கனவே நன்கொடையாளர் 200 ஏக்கர் இடத்தை தானமாக வழங்கியுள்ளார்.
பழநி தேவஸ்தானத்திடம் கல்லுாரி அமைக்க தமிழக அரசு அந்த இடத்தை ஒப்படைத்தது. கல்லுாரி துவங்குவதற்கான முதற்கட்ட பணிக்கு மத்திய அரசு ரூ.20 கோடி வழங்கியுள்ளது. கல்லுாரி துவங்காததால் இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நன்கொடையாளர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போகர் சித்தர் வாழ்ந்த மலை பழநி. எனவே பழநியில் சித்த மருத்துவக் கல்லுாரி, பல்கலை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் தமிழக அரசு கொண்டு வர, கொஞ்சம் நிதி ஒதுக்கினால் போதும். சித்தா பல்கலையின் வேந்தராக தமிழக முதல்வர் நீடிக்கலாம் என்றனர்.
கவலை வேண்டாம் ஜூலை மாதம் இது முடிந்து விடும்
We have to come out of the mindset that only our invaders done all good to us. At least, youngsters should research, find out the truth about our forefathers achievement and negate the narratives set over many decades.
இதற்கு ஒப்புதல் கொடுங்கள்
மத்திய அரசு செய்யும் பல நல்ல திட்டங்களை தடுக்காதீர்கள்
கால கொடுமை இதுதான். ABCD.....Z வரை பிழையின்றி சொல்லமுடியாதவர் வேந்தர் பதவிக்கு ஆசைப்படலாமா சித்தர்களின் தலைவர் முருகன்தான் தமிழகத்தை காக்கவேண்டும் .
அனைத்து மருத்துவ முறைகளுக்கும் சேர்த்து தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஒரே MGR மருத்துவப் பல்கலைக்கழகம் மட்டுமே போதும். தனி பல்கலைக்கழகம் அமைப்பதால் வீண்செலவுதான். சென்னையிலுள்ள மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனம் செய்யும் வேலையை இன்னொரு நிறுவனமும் DUPLICATION செய்வதில் அர்த்தமில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வளர்ச்சி- ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக்கழகமும் இருப்பதால் தூய தமிழ் வளர்ந்துவிட்டதா?
பல்கலை துணை வேந்தர் பதவி என்ன தொகையில் ஏலம் போகிறது என்பது ஈரோடு வெங்காயத்திற்கே வெளிச்சம்?
முதல்வராக நீடிப்பதே தமிழகத்தின் தலைவிதி. இதில் பல்கலைகழக வேந்தர் ஆசைவேறயா..? பிரதமர் பதவிக்கே ஆசைப்பட்டு பகல்கனவு கண்டவராச்சே.
Stalin ego is the only reason
ஏன் கவர்னர் இறங்கி வரலாமே? டாக்டர்கள் அதை தான் கவனம் வலியுறுத்துகிறார்கள்.. அவர் வழக்கம் போல் அவர் ஒரு தனி உலகத்தில் இருந்து கொண்டு.. இந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுத்துக் கொண்டிருக்கிறார்
முதல்வர் வேந்தராக ஆகிவிட்டால் அவருள்ளிட்ட எல்லா அமைச்சர், அதிகாரிகளும் சித்த மருத்துவம் மட்டுமே செய்து கொள்ள வேண்டுமென உத்தரவிடுவாரா? கல்வியில் அரசியல் நுழையக் கூடாது என்பதற்காகவே UCG இவ்விதியைக் கொண்டு வந்துள்ளது.
சித்த மருத்துவ பல்கலை அமைக்க நன்கொடையாளர் 200 ஏக்கர் நிலம் தானம் செய்துள்ளார் ....அதை அபகரிக்க விடியல் நடத்தும் அராஜக நாடகம்தான் இது ....தமிழ் நாடு முழுக்க பிளாட் போட்டு விற்று விட்டார்கள் ........மேலும்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!
-
தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...
-
நானும் நாடகமும்! பாத்திமாபாபுவின் பாசம்
-
நான் செய்த பாக்கியம்; பஞ்சாப்பில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
-
ஆஸ்திரேலிய ஓபனில் அல்காரஸ் சாம்பியன்; சாதனையை தவறவிட்டார் ஜோகோவிச்