பாஜ சமூக வலைதள பிரிவு நிர்வாகி கைது; நயினார் கண்டனம்
சென்னை: குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம் பறிக்கிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
அவரது அறிக்கை: வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரச் சம்பவம் குறித்து சமூகப் பொறுப்போடு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நமது தமிழக பாஜவின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜை திமுகவின் ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து தொலைபேசி வாயிலாக பிரவீன் ராஜின் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு, சட்டரீதியாக பிரவீன் ராஜூக்கு தமிழக பாஜ துணை நிற்கும் என்றும் உறுதியளித்தேன். குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம் பறிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது, சமூக வலைதளத்தில் பதிவிடுவோரை மட்டும் தேடித்தேடி கைது செய்யும் முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கர ஆட்சி கூடிய சீக்கிரம் தூக்கியெறியப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
Balaa - chennai,இந்தியா
31 ஜன,2026 - 14:29 Report Abuse
அந்த கேவலமான கருத்து சொல்லி முட்டு கொடுத்த சர்மிளாவுக்கு பதவி, பணம் எல்லாம் கொடுப்பார்கள். 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
31 ஜன,2026 - 14:06 Report Abuse
How can you expect rowdies to be arrested??? 0
0
Reply
மேலும்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!
-
தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...
-
நானும் நாடகமும்! பாத்திமாபாபுவின் பாசம்
-
நான் செய்த பாக்கியம்; பஞ்சாப்பில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
-
ஆஸ்திரேலிய ஓபனில் அல்காரஸ் சாம்பியன்; சாதனையை தவறவிட்டார் ஜோகோவிச்
Advertisement
Advertisement