வாஷிங்டன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் சனா இப்ராஹிம் மோதினர். முதலிரண்டு செட்களை 8-11, 8-11 என இழந்த அனாஹத், பின் எழுச்சி கண்டு அடுத்த 3 செட்களை 11-7, 11-8, 11-7 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். முடிவில் அனாஹத் 3-2 (8-11, 8-11, 11-7, 11-8, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, இங்கிலாந்தின் டெக்லான் ஜேம்ஸ் மோதினர். இதில் ஏமாற்றிய வீர் சோட்ரானி 1-3 (11-8, 6-11, 12-14, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement