திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

20

சென்னை: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை என அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

நமது திராவிட மாடலில்,

????வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்

????ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா

????வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என

வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15ம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும்.

மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement