சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
லக்னோ: சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத 68 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் உத்தரபிரதேச அரசு, ஜனவரி 31ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விபரங்களை மானவ் சம்பதா என்ற இணையதளப் பக்கத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், உரிய காலக்கெடுவுக்குள் சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளத்தை உத்தரபிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. சொத்து விபரங்களை பதிவேற்றும் வரையில் சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தலைமைச் செயலாளர் முறையான அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், பல ஊழியர்கள் அதனைப் பின்பற்றவில்லை. இதனால் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளமும் அவர்களுக்கு கிடைப்பது சந்தேகம் தான்," என்றனர்.
வாசகர் கருத்து (15)
ஆரூர் ரங் - ,
02 பிப்,2026 - 07:30 Report Abuse
ஊழியர்களை எதிர்த்து கொண்ட ஜெயா கதி என்னாயிற்று? தேர்தலில் முறைகேடு செய்ய உதவி காலி செய்து விட்டார்கள். அதனால்தானே ஸ்டாலின் பென்ஷன் விஷயத்தில் இறங்கி வந்துள்ளார். 0
0
Reply
c.mohanraj raj - ,
02 பிப்,2026 - 00:28 Report Abuse
அரசியல்வாதி மக்களை காக்கும் அதிசக்தி வாய்ந்த முதல்வர் இங்கேயும் தண்டத்திற்கு ஒன்று இருக்கின்றது இரும்புக்கரம் இரும்பு கரம் என்று இத்த கரத்தை தூக்கிக்கொண்டு 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
01 பிப்,2026 - 23:15 Report Abuse
It seems theyre not bothered about salary 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
01 பிப்,2026 - 22:20 Report Abuse
அரசு பணியாளர்கள் முன் அனுமதி பெறாமலும் மற்றும் வாங்கிய சொத்திற்கு சரியான நிதி ஆதாரம் காட்டாமலும் இருந்தால் காலம் தாழ்த்தாமல் அந்த சொத்தினை பறிமுதல் செய்வதோடு மட்டும் அல்லாமால் துறை ரீதியாக அவர்கள்மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 0
0
Reply
S. Venugopal - Chennai,இந்தியா
01 பிப்,2026 - 22:12 Report Abuse
அரசு துறைகளில் தற்பொழுது உள்ள பணியாளர்களின் நடத்தை விதிகளை மான்புமிகு உபி முதல்வர் யோகி அவர்கள் போலகடைபிடித்தாலே அரசு துறைகளில் ஊழலை அடியோடு ஒழித்துவிடலாம். பாராட்டப்பட வேண்டிய நல்ல செயல் 0
0
Reply
பேசும் தமிழன் - ,
01 பிப்,2026 - 21:45 Report Abuse
திரு யோகி போன்ற முதல்வர் தான் தமிழ்நாட்டுக்கு தேவை..... தானும் ஊழல் செய்ய மாட்டேன்... அதிகாரிகளையும் ஊழல் செய்ய விட மாட்டேன்.... அருமை.... அபாரம்.... குண்டு வைக்கும் ஆட்களுக்கு.... அவர்கள் பாஷையில் கடுமையான புல்டோசர் நடவடிக்கை எடுக்கிறார்.... வாழ்த்துக்கள் திரு யோகி அவர்களே !!! 0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
01 பிப்,2026 - 21:37 Report Abuse
புல்டோசர் இல்லையா? 0
0
Reply
AaaAaaEee - Telaviv,இந்தியா
01 பிப்,2026 - 21:29 Report Abuse
அருமையனா முடிவு 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
01 பிப்,2026 - 21:26 Report Abuse
யோகிஜி தாங்கள் தயவு பண்ணி ஒரு வருஷத்துக்கு மட்டும் எங்க டமில் நாட்டில் சீப் மினிஸ்டர் இன் சார்ஜ் ஆக இருங்க. இங்கு ஒரு ஸ்கூட்டரில் போகும் அளவுக்கு மட்டுமே வசதி உள்ளவன்கள் டோயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சுத்திக்கிட்டு இருக்கானுங்க. 0
0
Reply
Muthu Kumar - ,
01 பிப்,2026 - 20:45 Report Abuse
அருமை இந்த மாதிரி ஒரு முதல்வர் தான் தமிழ்நாட்டுக்கு தேவை ஜெய்ஹிந்த் 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
01 பிப்,2026 - 21:08Report Abuse
அண்ணாமலை அவர்களின் ஆட்சியில் இதெல்லாம் சாத்தியமே வேறெந்த திருட்டு த்ரவிஷன்கள் ஆட்சியிலும் இது சாத்தியமில்லை 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை குறித்து நிர்மலா சீதாராமன்
-
ஈரானுடன் ஒப்பந்தம்; டிரம்ப் நம்பிக்கை
-
இந்தியாவை இழிவுபடுத்த வேண்டாம் ; ராகுலை எச்சரிக்கும் கிரண் ரிஜிஜூ
-
எதிர்பார்ப்பு, ஏற்றம், ஏமாற்றம் தந்த பட்ஜெட் தொழில் துறையினரின் கருத்துகள்
-
ஜெயில் டூ பெயில்; பெயில் டூ ஜெயில் தி.மு.க., கூட்டணியை விமர்சித்த சுதாகர்ரெட்டி
Advertisement
Advertisement