பொன் மாணிக்கவேல் வழக்கு: முடித்துக்கொள்ள கோர்ட் பரிந்துரை
புதுடில்லி: தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம், 2018ல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த பொன். மாணிக்கவேல், அது தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை, துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுக்காமல் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து கால தாமதம் செய்ததால் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், 'சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் ஒரு வாரத்தில் துறை சார்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் ஒப்படைத்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என, 2019 டிசம்பரில் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் தற்போது என்ன நிலவரம் என்பது குறித்த அறிக்கையை இரு தரப்பும் தாக்கல் செய்யுங்கள்; அதை அடிப்படையாகக் கொண்டு அடுத்த உத்தரவை பிறப்பிக்கிறோம்' எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு அமர்வு ஒத்தி வைத்தது.
மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரிக்க பெரிதாக எதுவும் இல்லை என்பதால், அடுத்த விசாரணையோடு வழக்கை முடித்து விடலாம் எனவும் அமர்வு கூறியுள்ளது.
மே மாதத்தில் வைத்துக் கொள்ளலாம்.
மாணிக்க வேல் கமிஷன் வாங்கியதிற்கு உள்ளே தள்ளுங்கள் , இவர் பிஜேபி கா ஒரு தொகுதியில் நிற்க போகிறாராம்
இவர் ஒரு தொகுதியில் நிக்குறதை வரவேற்கிறோம். அப்புடி நின்னால ஜெயிப்பது உறுதி. அடியாட்கள் சகிதமாக அறிவிலிகள் நிக்கும் போது இவர் நிற்பது நல்லது.மேலும்
-
ஜோகோவிச் 'நம்பர்-3': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்
-
வாஷிங்டன் ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'
-
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு; கைதான தந்திரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை
-
இந்தியா கேட் போன்று அமெரிக்காவிலும் வளைவு: டிரம்ப் ஆசை
-
பாகிஸ்தானில் இருந்து வந்த 250 தலித் ஹிந்து குடும்பங்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் தடை