வாஷிங்டன் ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில், உலகின் 'நம்பர்-31' இந்தியாவின் அனாஹத் சிங் 17, உலகின் 'நம்பர்-10' இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடி 28, மோதினர்.

அபாரமாக ஆடிய அனாஹத் 3-0 (12-10, 11-5, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டில்லியை சேர்ந்த அனாஹத், சீனியர் பிரிவில் தனது 15வது பட்டம் வென்றார்.

Advertisement