மற்றொரு ஊழல் வழக்கு: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை
டாக்கா: வங்கதேசத்தில் அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அதில் அவருக்குமரண தண்டனை, சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு குடியிருப்பு திட்டத்தில் நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட இரண்டு முறைகேடு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இந்த வழக்கில் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் ரிஸ்வானாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா 2 ஆண்டுகள் சிறை என மொத்தம் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது இவர் பிரிட்டன் எம்பி ஆக உள்ளார்.அந்நாட்டின் முன்னாள் அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் மகன் ருத்வான் முஜிப் சித்திக்கிற்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டு உள்ளது.
பேசாம இந்தியாவிலேயே இருந்திருங்க.
பாகிஸ்தான் மாதிரியே வங்கதேசத்திலும் முந்தைய பிரதமர், அதிபர்களை கொல்லும் வழக்கம் இருக்கு.
உதடு பூரா லிப்ஸ்டிக். தேவையா?
இன்னும் 50 ஆண்டுகள் சிறையில் என்றாலும் கூட அவர் அங்கு வரமாட்டாருங்கோ ஏன்னா தலாய் லாமா போலத்தான் கடைசிவரைக்கும் இந்தியா அடைக்கலம் கொடுக்கும் அவருக்கு வாழ்க வளமுடன்மேலும்
-
ஜோகோவிச் 'நம்பர்-3': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
-
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்
-
வாஷிங்டன் ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'
-
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு; கைதான தந்திரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை
-
இந்தியா கேட் போன்று அமெரிக்காவிலும் வளைவு: டிரம்ப் ஆசை
-
பாகிஸ்தானில் இருந்து வந்த 250 தலித் ஹிந்து குடும்பங்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் தடை