கறிக்கோழி பண்ணை விவசாயிகள் முறையீடு


ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, ஈரோடு மாவட்ட செயலர் நடராஜன் மற்றும் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்தி செலவு உயர்ந்துள்ளதால், வளர்ப்பு கூலியை, 6.50 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பண்ணை நாட்டு கோழி வளர்ப்புக்கு, 25 ரூபாய், காடை வளர்ப்புக்கு, ஏழு ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்.



முத்தரப்பு கூட்டத்தை மீண்டும் நடத்தி நியாயமான உயர்வு தர வேண்டும். ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும். கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கோழி பிடித்ததில் இருந்து, ஒரு வாரத்துக்குள் வளர்ப்பு கூலியை நிறுவன வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தோம். இவ்வாறு கூறினர்.

Advertisement