எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், மும்பையில் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகானை நேற்று சந்தித்து, 2026 - 27 நிதியாண்டு பட்ஜெட்டின் ஒட்டுமொத்த நன்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பு, 2027ம் நிதியாண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட எஸ்.டி.டி., எனும் டெரிவேட்டிவ் வர்த்தகங்களுக்கு விதிக்கப்படும் பங்கு பரிவர்த்தனை வரி உயர்வின் பின்னணியில் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது.

இந்த எஸ்.டி.டி., வாயிலாக, 2027ம் நிதியாண்டில் 73,700 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Advertisement