எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு

மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் பங்குகளை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. தற்போது அரசின் பங்கு 96.50 சதவீதமாக உள்ளது. கடந்த மே 2022-ல் நடைபெற்ற புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3.50 சதவீத பங்குகளை விற்று, 21,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து அரசு திரட்டியது.


இந்நிலையில், நிதி சேவை துறை செயலர் நாகராஜு கூறுகையில், ''தேவையான அனுமதிகள் கிடைத்து, சந்தை நிலை சாதகமாக இருந்தால், அடுத்த நிதியாண்டில், இரண்டாம் கட்ட பங்கு விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளது,'' என கூறினார்.

Advertisement