கான்கிரீட் உதிர்ந்த மின் கம்பத்தால் வட்டம்பாக்கத்தில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்: வட்டம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கான்கிரீட் உதிர்ந்து, விபத்து அபாயம் ஏற்படும் வகையில், முழுதும் சேதமடைந்து உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, வட்டம்பாக்கம் பிரதான சாலையோரம், மின் கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கின்றன.
இதில், வட்டம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள மின் கம்பம், கான்கிரீட் உதிர்ந்து முழுதும் சேதமடைந்து உள்ளது.
கிராம மக்கள் சென்று வரும் பிரதான சாலையில், விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அப்பகுதி மக்கள் விபத்து அபாயம் ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்
எனவே, மின் வாரிய அதிகாரிகள் சேதமான மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்