மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் மின் விபத்து அபாயத்தில் வேடல் மக்கள்
வேடல்: வேடல் கிராம பிரதான சாலையோரம் மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால் மின்விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேடல் கூட்டு சாலையில் இருந்து, கீழ்பேரமநல்லுார் செல்லும் பிரதான சாலையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தடை பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், மின்கம்பம் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசும் வகையில் வளர்ந்துள்ளனன.
காற்றடிக்கும்போது, மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால், தீப்பொறி ஏற்படுகிறது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், மின்கம்பி அறுந்து விழுந்தால், அதிகளவு உயிர்சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின்கம்பியில் உரசும் மரத்தின் கிளைகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்