ஆலோசனை கூட்டம்

மேலுார்: மேலுார் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தாலுகா தலைவர் மணவாளன் தலைமையில் நடந்தது.


தொழிலாளர், விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து மறியல் நடத்த முடிவானது. நிர்வாகிகள் சேகர், பிரான்மலை, மெய்யர், திலகர், ஏ.ஐ.டி.யு .சி., நிர்வாகி பெரியவர், விவசாய சங்க நிர்வாகிகள் அடக்கி வீரணன், கதிரேசன், ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.

Advertisement