அவையில் எம்பிக்கள் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: அவையில் பார்லிமென்ட் எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ராணுவ முன்னாள் தளபதி எழுதிய புத்தகம் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று சபையில் மீண்டும் பேச முயன்றார். அவருக்கு ஆதரவாக காகிதங்களை கிழித்தெறிந்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் உட்பட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் என் சகோதரர் ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜ அரசு ஏன் அஞ்சுகிறது?
அவையில் பார்லிமென்ட் எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தயாராக இருக்க வேண்டும் .
மேலும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்த வேண்டும். 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமை மீட்டெடுக்கப்படுவதற்காக, அந்த சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் MLA க்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி விட்டு தான் மறுவேலை பார்க்கிறீர்களா.... எதிர்கட்சி ஆட்கள் பேசும் போது மைக் வேலை செய்வதில்லை.... அப்படியே சத்தம் போட்டு பேசினால்.... அவையை விட்டு அப்புறப்படுத்த சபாநாயகர் மூலம் சொல்ல வேண்டியது..... இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.
இதேயே மாநில சட்ட சபையில் உங்க அமைச்சர்களிடமும் சொல்லவும் . சபா நாயகன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும் . உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தேவையில்லாமல் முட்டு கொடுத்து அமைச்சர்களை பேசவிடாமல் தடுக்க வேண்டாம்
மாநில அவையில் இது நடந்தால் எல்லோரும் குண்டு கட்டாக வெளியே தள்ளியிருப்பார்
என்ன கேள்வி. கேண்டீன்ல வடையில் எண்ணை அதிகமாக இருக்கிறது. சாம்பாரில் உப்பு கம்மியாக இருக்கிறது. அதை சரி செய்யுங்கள் என்றா?
தமிழ் நாடு 39 ம் கேன்டீனில் மட்டுமே ஆஜர். இல்லாட்டா அவையில் கலவரம் செய்ய. அல்லது ஷேம் ஷேம் என்று குரல் எழுப்ப மட்டுமே?
சட்ட சபையில் அந்த உரிமை கவர்னருக்கு இருக்கிறதா என்று பொது மக்கள் பதில் கேள்வி கேட்கிறார்கள்.
நீங்கள் சட்ட மன்றத்தில் செய்வதை விட நாடாளு மன்றம் சிறப்பாக செயல் படுகிறது
தமிழக சட்டசபைக்கு அனுப்புகிறோம் நீங்கள் பதில் சொல்லலாம் கேள்வி கேட்டால் கேட்கவே விடுவதில்லை
முதலில் தமிழ்நாட்டு எதிர்கட்சி MLA களுக்கு பதில் சொல்லுங்கள் . அப்பறோம் பாடம் எடுக்கலாம் .
உன்னை எல்லாம் முதல்வராக்கி வீணாய்ப் போனவர்களை எல்லாம் எம்பிக்கள் ஆக செய்த தமிழக மக்களை சொல்ல வேண்டும்மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா