அவதுாறு பேச்சு: ராகுலை கண்டித்து டில்லியில் காங்.,தலைமையகம் முன் பாஜ போராட்டம்
புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவ்நீத் பிட்டூவை அவதுாறாக பேசியதை கண்டித்து, டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்திற்கு முன் பாஜவினர் போராட்டம் நடத்தினர்.
நேற்று பார்லிமென்டில் சபை நடவடிக்கை பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட காங்கிரஸ் எம்பிக்கள் உள்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக ராகுல் போராடியபோது, காங்கிரஸிலிருந்து பாஜவிற்கு மாறிய ரவ்நீத் பிட்டூவை நோக்கி துரோகி நண்பர் என்று விமர்சித்தார்.
இதற்குப் பதிலளித்த பிட்டூ, ராகுலை "நாட்டின் எதிரி" மற்றும் "தெரு குண்டர்" என்று பதிலடி தந்தார்.
அதை தொடர்ந்து ராகுல் அவதுாறாக பேசியதை கண்டித்து,டில்லி பாஜவினர் காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே பெரும் இன்று போராட்டத்தை நடத்தினர்.
டில்லி பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மன்சிங் சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள், ராகுலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கிச் செல்ல முயன்ற பாஜ தொண்டர்களை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தித் தற்காலிகமாகக் கைது செய்தனர்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட தலைவர்கள் கூறுகையில், ராகுலின் இந்த கருத்து ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் தியாகத்தையும் அவமதிப்பதாகும் என்று குற்றம் சாட்டினர்.
மேலும்
-
சசி தரூர் மகன் உட்பட 300 பேரை பணி நீக்கம் செய்தது வாஷிங்டன் போஸ்ட்!
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை
-
ஆபீசை சாணத்தால் சுத்தம் செய்த விவகாரம்; அதிகாரிகளுக்கு தேசிய ஆணையம் கெடு
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து