விவசாயி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்; அதிகாரி கைது
ஆவடி: ஆவடியில் மின் இணைப்பு வழங்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்(47). விவசாயியான இவர் அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கோரி, கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து இருந்தார்.
அவரின் விண்ணப்பத்தை மின் வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன்(47) என்பவர் பரிசீலித்தார். பின்னர் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் ரூ.15,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத ராகவன், இது குறித்து திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராகவனிடம் போலீசார் தந்து, அதிகாரி பாலசுப்ரமணியனிடம் தருமாறு அறிவுறுத்தினர்.
அவரும், கோவில்பதாகை மின்வாரிய அலுவலகம் சென்று வருவாய் மேற்பார்வையாளரிடம் பணத்தை கொடுத்துள்ளார். லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திராவிட பாரம்பரியம் என்பது ஆட்சி மற்றும் நிர்வாகத்தை முழுவதுமாக செயலிழக்கச்செய்வதுதான். ஒரே கட்சி இரண்டு முறை ஆட்சி செய்தால் ஊழல் மற்றும் லஞ்சம் எல்லைமீறிப்போகும்.
பணிமாற்றம், விடுப்பு, பதவியுயர்வு எல்லாவற்றுக்கும் மேலிடத்தை கவனிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் வேறெங்கு, வேறப்படி வசூலிப்பது? எந்த மந்திரியையாவது இப்படி கைது செய்ய முடியுமா?
லஞ்சம் வாங்கியவர்கள் உடனே பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்
சாதாரண ஆட்கள் மாட்டுவார்கள். கோடி கணக்கில் ஊழல் செய்யும் மந்திரி மாட்ட மாட்டார்கள்.
முதலில் இவர்களை சரியாக தண்டித்தால் ஊழலை ஒழித்துவிடலாம் இப்படியே இவரை பிடித்தால் அவரை ஏன் பிடிக்கலை என்று கேட்டுக்கொண்டிருந்தாள் எல்லோரும் தப்பி விடுவார்கள்
வாடிக்கையாளர்களின் புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கைது செய்தனர் என்ற செய்திகள் வருகின்றன ஆனால் அதிகாரியின் கைது அல்ல முக்கியம் அந்த விவசாயிக்கு லஞ்சம் இல்லாமல் மின் இணைப்பு பெற்றுத் தரப்பட்டதா என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்மேலும்
-
த.வெ.க., கூட்டத்தில் பாதுகாப்பு பணி 2 போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை
-
வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் சிலிகுரி சுரங்க ரயில் பாதை திட்டம்: நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
-
பிரதமர் மோடியின் மலேசியா பயணம் முதல் டி20 உலக கோப்பை தொடர் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 07)!
-
நான், வெஜ் மட்டுமே... என்போருக்காக 'நான் வெஜ்'
-
ஆமையை குளத்தில் விடாதீர்
-
இந்த 6ஐ மனசுல வச்சுக்கோங்க!