ஆமையை குளத்தில் விடாதீர்

உலகின் பழமையான ஊர்வன இன விலங்கு ஆமை. இவற்றில் நிலம், நன்னீர், கடலில் வாழ்பவை என மூன்று வகை இருக்கின்றன. மொத்தம் 350க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும், செல்லப்பிராணியாக நாம் வளர்க்கும் பல ஆமை வகைகள், நன்னீரில் வாழ்பவையே. இவை, நீர், நிலத்தில் வாழ்வதற்கேற்ற சூழலை அமைத்து தர வேண்டும்.


ஆமைக்கு பற்கள் இல்லை. தாடை அருகே இருக்கும் கூர்மையான அலகு வாயிலாக உணவை சாப்பிடும். ஆமையின் ஓட்டில் நரம்பு முனைகள் இருப்பதால் தான், நாம் தொட்டால் அவை உடலை உள்ளிழுத்து கொள்கின்றன. வெளிநாட்டு இன ஆமைகள் குறிப்பாக 'ரெட் இயர் ஸ்லைடர்' எனும் சிவப்பு காது கொண்ட ஆமையை, நம்மூர் குளத்தில் விட்டால், அவை அங்கு இயற்கையாக வாழும் மீன் உள்ளிட்ட பிற இனங்களை சாப்பிட்டு, குளத்தின் சூழலை மாற்றிவிடும். ஆசையாக ஆமையை வாங்கி வளர்ப்போர் ஒரு கட்டத்தில் அதை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டால், எக்காரணம் கொண்டும் குளத்தில் விட்டு விடக்கூடாது.

Advertisement