அம்மன் கோவிலில் நகை திருடிய இரண்டு பேர் கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனுார் கிராமத்தில், கிராம தேவதை பூதேவி கோவில் உள்ளது.

இங்கு கடந்த மாதம், 10ம் தேதி பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் கிடந்த, 4 கிராம் தங்கத்தாலியை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை பார்த்தபோது, கர்நாடக மாநிலம், கோலார் அருகே முனுபாகல் கிரா-மத்தை சேர்ந்த நாகராஜ், 30, மலவள்ளி கிரா-மத்தை சேர்ந்த ரவி, 25, ஆகியோர், அம்மன் நகையை திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement