விவசாய நிலத்தில் மர்ம பொருள் வெடித்து விவசாயி காயம்

தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கெண்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்-தவர் பிரகாஷ், 50, விவசாயி. கடந்த, 3ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, தன் விவசாய நிலத்தில், மாடுகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார்.

அப்-போது, அங்கு கிடந்த ஏதோ ஒரு மர்ம பொருள் மீது, அரிவாள் பட்டதால் வெடித்து சிதறியது. இதில், விவசாயி பிரகாஷின் இடது கை விரல்-களில் காயம் ஏற்பட்டு, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் செய்தார். காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்த வெடி வெடித்திருக்கலாம் என, போலீசா-ருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், விசாரித்து வருகின்றனர்.

Advertisement