சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா முதல்வர் 'பகீர்' புகார்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரை மிரட்டி, 1,500 கோடி ரூபாய் வரை பறிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தெலுங்கானாவில் சந்திர சேகர ராவ் தலைமையி லான முந்தைய பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் என முக்கிய பிரபலங்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசா ரித்து வருகிறது. சமீபத்தில், இந்தக்குழு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும் விசாரித்தது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரசின் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று கூறியதாவது:

பி.ஆர்.எஸ்., என்பது, 'பிளாக்மெயில் ராஜகீய சமிதி' என்ற மிரட்டல் அரசியல் குழுவின் சுருக்கமே. முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர் கள் என யாரையும் விடாமல், அவர்களின் தொலைபேசி உரையா டல் ஒட்டுக் கேட்கப்பட்டு ள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் பி.ஆர்.எஸ்., 1,500 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பத்திரங்கள் வழியாக சேகரித்துள்ளது.

இந்தப் பணம் யாருடையது? தொழிலதிபர்களை மிரட்டி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு பறித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement