காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவனுக்கு 'காப்பு'

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணிபுரிபவர் குல்லுார் சந்தையை சேர்ந்தவர் பாண்டிமீனா, 24. அரசகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர்.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டிமீனா கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணிக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனைக்கு சென்ற வெற்றிவேல், ஆய்வகத்தில் இருந்த பாண்டிமீனாவிடம், தகராறு செய்து, அவரது சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்.

சத்தம் கேட்டு, வார்டில் இருந்த நோயாளிகள் வந்ததால், வெற்றிவேல் தப்பி ஓடினார்.

விருதுநகர் கிழக்கு போலீசார், வழக்குப்பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனர்.

Advertisement