நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 07) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (பிப்.,08) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
நேற்றைய நிலவரம்
நேற்று பிப்ரவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 560 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
இந்தச் செய்தியைப் பற்றிய எனது பார்வை:
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 வரை கடுமையாக உயர்ந்த நிலையில், இன்று ரூ.560 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்குச் சற்று ஆறுதலான விஷயம். இருப்பினும், ஒரு சவரன் தங்கம் இன்னும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாவது நடுத்தர மக்களுக்குப் பெரிய சுமையாகவே உள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலை இவ்வளவு வேகமாக ஏறி இறங்குவது சாமானியர்களின் சேமிப்புத் திட்டங்களைப் பாதிக்கிறது.மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்