பார்லியில் விதி மீறிய எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுங்கள்; சபாநாயகருக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம்
நமது டில்லி நிருபர்
பார்லிமென்ட் அவைக்குள் விதிகளை மீறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமல் முதல் முறையாக மசோதா நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து உயர்த்திய போர்க்கொடி தான் காரணம். அவர்கள் விவாதத்தை நடத்த விடாமல் அவைக்குள் நடுவில் ஒன்று கூடி அமளியில் ஈடுபட்டு தொந்தரவு அளித்தனர்.
அவைக்குள் விதிகளை மீறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 4ம் தேதி ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, லோக்சபாவின் கண்ணியம் மற்றும் புனிதத்தை காக்க உங்களது செயல்பாட்டிற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்று முழு தேசமும், லோக்சபா அறைக்குள் மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் வருந்தத்தக்க சம்பவங்களில் ஒன்றைக் கண்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குள் விதிகளை மீறி செயல்பட்டனர்.
சபாநாயகரின் மேஜையில் ஏறி கோஷம் எழுப்பினர். காகிதங்களைக் கிழித்து உங்களை நோக்கி வீசியதைக் கண்டோம். துரதிர்ஷ்டவசமாக பெண் எம்பிக்களும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். பதாகைகளை கையில் ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பிரதமரின் இருக்கையைச் சுற்றி வளைத்தது மட்டுமல்லாமல், மூத்த அமைச்சர்களின் அமரும் இடத்திற்குள் நுழைந்தனர்.
அங்கு இருக்கையில் அமர்ந்து அத்துமீறி செயல்பட்டனர். எனவே அவை வளாகத்திற்குள் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்து நமது ஜனநாயக நிறுவனங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது, விதிகளின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாஜ பெண் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.
வாசகர் கருத்து (11)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 பிப்,2026 - 22:07 Report Abuse
சபாநாயகர் மேஜை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் காகிதங்களை கிழித்தெறிந்து அமர்க்களம் செய்தவர்கள் கூக்குரலிட்டவர்கள் எல்லாருடைய பெயர்களையும் சபாநாயகர் உடனே வெளியிட வேண்டும் இது மக்கள் ராஜ்ஜியம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் இவ்வாறு
தரக்குறைவாக நடந்துகொண்டால், யாராக இருந்தாலும் சரி அவர்களை அந்தமக்களே கீழே இறக்கி விடுவார்கள் அல்லது அவர்களை கீழே இறக்க உச்ச நீதிமன்றம் செல்வார்கள் அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும் தழைக்கும் 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
10 பிப்,2026 - 20:35 Report Abuse
பாஜக பெண் எம் பி க்களுக்கு என்னுடைய கிரேட் சல்யூட். 0
0
Reply
சோலை பார்த்தி - ,
10 பிப்,2026 - 18:15 Report Abuse
ஆப்ரேசன் செந்தூர் ல் பெண்கள் தலைமையில் நடந்தது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதில் சொல்ல வரும் பிரதமரை தாக்க இந்த பெண் MP. க்கள் பாக்கிஸ்தான் கைகூலிகளாக செயல்பட்டுள்ளனர்.. இவர்களுக்கு உரிய தண்டனை தர வேண்டும்.. பார்லிமென்ட் க்குள்ள எது நடந்தாலும் கோர்ட் போக முடியாது என்ற திமிர்.. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
10 பிப்,2026 - 14:01 Report Abuse
தேர்ந்தெடுத்த மக்களின் பிரச்சனி களை ஒரு பொருட்டாக மதிக்காதா
MP க்கள் இருந்தென்ன பயன். தெருவிற்கு தூக்கி கடாசுங்கள். பயம் வேண்டும் அசட்டு துணிச்சலுக்கு வேலையில்லை. 0
0
Reply
kulanthai kannan - ,
10 பிப்,2026 - 12:19 Report Abuse
ஜோதி மணிக்கு எதிராக ஏன் தமிழக பாஜக கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தக் கூடாது? 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
10 பிப்,2026 - 11:05 Report Abuse
"விவாதங்கள் மூலம் தீர்வு காண்பதே ஆரோக்கியமான ஜனநாயகம். அதை விடுத்து அவையின் நடுப்பகுதிக்கு வந்து இடையூறு செய்வது கண்டிக்கத்தக்கது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்." 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
10 பிப்,2026 - 11:04 Report Abuse
"சபையின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படும் எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். அப்போதுதான் எதிர்காலத்தில் அவையின் கண்ணியம் காக்கப்படும். பாஜக எம்பிக்களின் இந்த கடிதம் நியாயமானது." 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
10 பிப்,2026 - 11:03 Report Abuse
"மக்களாட்சியின் புனிதமான இடமாக கருதப்படும் நாடாளுமன்றத்தில், விதிகளை மீறி செயல்படுவது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளால் தான் மக்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்." 0
0
Reply
Anand - chennai,இந்தியா
10 பிப்,2026 - 11:02 Report Abuse
அராஜகம் செய்த எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த பேர்வழிகள் அடங்குவர். 0
0
Reply
inamar - chennai,இந்தியா
10 பிப்,2026 - 10:39 Report Abuse
கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும். அவர்கள் பதவியை பறிப்பதோடு எதிர்காலத்தில் அவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க வேண்டும். கண்டிப்பாக அவர்கள் எம்பீ க்கள் அல்ல பேடிகள் 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
Advertisement
Advertisement