உதவித்தொகை உயர்த்த மாற்று திறனாளிகள் மறியல்

கோவை, மாதாந்திர உதவி தொகையை உயர்த்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த 38 மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ”ஒடிசா, திரிபுரா, புதுச்சேரி, தெலுங்கானா, டெல்லி மாநிலங்களில் மாற்று திறனாளிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2,000 மட்டுமே தரப்படுகிறது. இது வாழ்வதற்கு போதுமானதாக இல்லை. உயர்த்தி வழங்க வேண்டும்” என்றனர்.

Advertisement