திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு
செங்கல்பட்டு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
கலெக்டர் சினேகா அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான 'தாட்கோ' மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது, தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகத்தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன், உயர் தொழில்நுட்ப ஆடை வடிவமைப்பு, மேலாண்மை, அழகுக்கலை, சிகை அலங்கார மேலாண்மை ஆகிய பயிற்சிகள் வழங்க உள்ளது.
இப்பயிற்சிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும், கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி
-
மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்
-
கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை ராகுலும், ஸ்டாலினும் முடிவு செய்வர்: செல்வபெருந்தகை
-
விவசாயிகளைக் கண்ணீரில் மிதக்கவிடும் திமுக; தினமலர் இணையதளம் செய்தியை மேற்கோள் காட்டிய நயினார்!
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு